News February 9, 2025
ஜம்மு-காஷ்மீர் Ex முதல்வர் மெஹபூபா முப்தி கைது!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739068127500_1241-normal-WIFI.webp)
ஜம்மு-காஷ்மீர் Ex CM மெஹபூபா முப்தியை கைது செய்த போலீசார் வீட்டுக் காவலில் அடைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாரமுல்லா செக்போஸ்ட்டில் லாரி டிரைவரை பாதுகாப்பு படையினர் அண்மையில் சுட்டுக் கொன்றனர். மேலும், கதுவாவில் போலீஸ் காவலிலிருந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை முப்தி சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News February 10, 2025
உங்கள் குழந்தைகளுக்கு போன் கொடுக்கிறீர்களா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739125999512_785-normal-WIFI.webp)
குழந்தைகள் அழுகையை நிறுத்த செல்போனைக் கொடுக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் அவர்களுக்கு தீங்கு செய்கிறீர்கள். குழந்தைகள் 6 மாதத்திலிருந்து தங்களைச் சுற்றியுள்ள சூழலைப் பார்த்து பேசக் கற்றுக்கொள்கிறார்கள். இவ்வயதில் அவர்களிடம் போன் கொடுப்பதால், 3 வயது வரை பேச முடியாமல் போகும் அபாயம் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். எதிர்காலத்தில் ஆட்டிசம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.
News February 10, 2025
கும்பமேளாவில் பங்கேற்கிறார் குடியரசுத் தலைவர்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739133330097_785-normal-WIFI.webp)
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (பிப்.10) மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளார். இதையொட்டி, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. PM மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கெனவே நீராடி சென்றுள்ளனர். இதுவரை 35 கோடிக்கும் அதிகமான மக்கள் நீராடியுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, வரும் 26ம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெற உள்ளது.
News February 10, 2025
உங்களுக்கு ஒரு ‘குட்டி ஸ்டோரி’
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739121600172_347-normal-WIFI.webp)
மழை வேண்டி அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது என்று கிராமத்தினர் முடிவு எடுத்தனர். திட்டமிட்ட நாளில் அனைவரும் ஓரிடத்தில் கூடி, மிக பயபக்தியுடன் கடவுளிடம் மழை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் கையில் குடையுடன் அங்கு வந்தான்….இது தானே நம்பிக்கை!