News February 2, 2025

ஜல்லிக்கட்டு: தொண்டையில் கொம்பு குத்தி இளைஞர் பலி

image

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாட்டின் கொம்பு தொண்டையில் குத்தி இளைஞர் பலியானார். குமாரபாளையத்தில் நடந்த இந்த ஜல்லிக்கட்டில் பல பகுதிகளில் இருந்தும் 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். சேலம் தலைவாசலைச் சேர்ந்த எடிசன், காளையை அடக்க முயன்றபோது தொண்டையில் கொம்பு குத்தியது. இதில் பலத்த காயமடைந்த அவர் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News March 2, 2026

தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பது ஏன்?

image

பிறந்த குழந்தைகளின் வயிற்றில் இருந்து காய்ந்து உதிரும் தொப்புள் கொடியை தாயத்தில் அடைத்து வைப்பார்கள். வளர்ந்த பிறகு ஏதேனும் நோய் தாக்கினால், அந்த தொப்புள் கொடியை பொடி செய்து கொடுத்தால், நோய் குணமாகும் என நம்பினர். தொப்புள் கொடி ரத்தத்தில் அதிகளவு மூலச்செல்கள் உள்ளன. நரம்பியல் கோளாறுகள், திசு சேதம் போன்ற நோய்களுக்கு தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல்கள் பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

News March 2, 2026

பங்குச்சந்தை வீழ்ச்சி.. ₹8 லட்சம் கோடி இழப்பு!

image

இஸ்ரேல்- US- ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் 1,498 புள்ளிகளும், நிப்டி 455 புள்ளிகளும் வீழ்ந்தன. முதலீட்டு மதிப்பில் சுமார் ₹8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. எண்ணெய் நிறுவனப் பங்குகள் 6% வரை சரிந்துள்ளன. ஆனால், பாதுகாப்பு துறை பங்குகள் மட்டும் 5% – 13% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 2, 2026

தவெக – காங்கிரஸ் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை?

image

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க காங்., முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராகுல் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள நிலையில், ஆதவ்வும் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுவதால் இதுகுறித்த யூகங்கள் வலுத்துள்ளன. மேலும், இதுபற்றி காங்கிரஸாரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறதாம். அத்துடன் கூட்டணி பற்றிய முடிவை இன்று மாலைக்குள் சொல்லுமாறு காங்.,க்கு திமுக கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!