News January 23, 2025

ஜல்கான் ரயில் விபத்து: PM மோடி இரங்கல்

image

மகாராஷ்டிரா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ₹1.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000மும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஜல்கான் அருகே சென்றுகொண்டிருந்த EXP ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், கீழே குதித்தவர்களில் 12 பேர் மற்றொரு ரயில் மோதி உயிரிழந்தனர்.

Similar News

News October 23, 2025

அனைத்து பள்ளிகளிலும்.. பறந்தது புதிய உத்தரவு

image

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் விடுத்துள்ளது. ஏற்கெனவே, கடந்த 5 நாள்களாக வெளுத்து வாங்கும் கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என HM – களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 23, 2025

காடுகள் வளர்ப்பில் இந்தியா டாப்-3

image

காடுகள், பூமியின் நுரையீரல். அவை அழியும் போது, மனித வாழ்வின் சுவாசமும் நின்று போகிறது. இந்த காடுகளை அதிகரிப்பதில், UN அறிக்கையின்படி உலகளவில் இந்தியா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளது. உலக வன பரப்பு தரவரிசையில் இந்தியா ஒரு படி முன்னேறி, தற்போது 9வது இடத்தை பிடித்துள்ளது. 2025-ல் இந்தியாவின் வனப்பரப்பு 72.7 மில்லியன் ஹெக்டேராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் மொத்த வனப்பரப்பில் சுமார் 2% ஆகும்.

News October 23, 2025

பிரபல தமிழ் நடிகர் பங்கேற்ற நிகழ்ச்சியில் விபத்து

image

கோவையில் நடந்த ‘டியூட்’ பட நிகழ்ச்சியில் விபத்து ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு வெளியான டியூட் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படக்குழுவினர் ஒவ்வொரு பகுதியாக சென்று ரசிகர்களை சந்திக்கின்றனர். இந்நிலையில், கோவையில் நடந்த நிகழ்ச்சியில், பிரதீப் ரங்கநாதன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, அவரை நோக்கி இளைஞர்கள் படையெடுத்ததால், தடுப்புகள் சரிந்து விழுந்தது. இதில், சிலர் காயமடைந்துள்ளனர்.

error: Content is protected !!