News January 23, 2025
ஜல்கான் ரயில் விபத்து: PM மோடி இரங்கல்

மகாராஷ்டிரா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ₹1.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000மும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஜல்கான் அருகே சென்றுகொண்டிருந்த EXP ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், கீழே குதித்தவர்களில் 12 பேர் மற்றொரு ரயில் மோதி உயிரிழந்தனர்.
Similar News
News November 21, 2025
வெறும் வயிற்றில் டீ குடிப்பது நல்லதா?

காலையில் எழுந்து பல் துலக்கியவுடன் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் இது நல்லதல்ல என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். டீ தூளில் உள்ள கஃபைன், டானின் ஆகியவை வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும். மேலும், அமிலத்தன்மையை அதிகரித்து குமட்டலை உண்டாக்கும் என்றும், பற்களில் கறைகள் உண்டாகி அது நிரந்தரமாகிவிட வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
News November 21, 2025
நெல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்துக: அன்புமணி

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்ததாக வெளியான செய்திகள் வருத்தமளிப்பதாக X-ல் அவர் பதிவிட்டுள்ளார். ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டிய நிலை உண்டாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 21, 2025
BREAKING: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

திருவாரூரில் அமமுக நிர்வாகி மணிகண்டன் 500-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். Ex அமைச்சர் காமராஜ் முன்னிலையில், தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்து கொண்ட அவர், மீண்டும் தாய்க் கழகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி எனக் கூறினார். NDA கூட்டணியிலிருந்து TTV விலகிய பிறகு சென்னை, தஞ்சை, வேலூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து <<18211919>>அமமுக நிர்வாகிகள்<<>> அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.


