News January 23, 2025
ஜல்கான் ரயில் விபத்து: PM மோடி இரங்கல்

மகாராஷ்டிரா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ₹1.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000மும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஜல்கான் அருகே சென்றுகொண்டிருந்த EXP ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், கீழே குதித்தவர்களில் 12 பேர் மற்றொரு ரயில் மோதி உயிரிழந்தனர்.
Similar News
News January 17, 2026
NDA கூட்டணிக்கு அழைக்கவில்லை: OPS

ஜன.23-ல் PM மோடி தலைமையில் நடைபெறவிருக்கும் <<18878783>>NDA <<>>கூட்டணி கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டத்திற்கு, தனக்கு அழைப்பு வரவில்லை என OPS தெரிவித்துள்ளார். ஜன.14-ல் OPS-ஐ சந்தித்த TTV, கூட்டணி தொடர்பாக ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசித்ததாக கூறப்பட்டது. இதனால், இருவரும் NDA கூட்டணிக்கு செல்வார்களா என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், OPS இவ்வாறு கூறியுள்ளது அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
News January 17, 2026
மெளனியாக இருப்பது ஏன்? விஜய்க்கு அதிர்ச்சி!

பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி CBI விசாரணையிலிருந்து பாதியில் திரும்பிய விஜய், பொங்கல் விழாக்களில் பங்கேற்காதது சர்ச்சையாக மாறியுள்ளது. குறிப்பாக கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற விஜய், பொங்கலுக்கு மட்டும் ஏன் X பதிவில் ஒரு வாழ்த்துடன் முடித்து கொண்டார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன் ஜன நாயகன் பட சென்சார் விவகாரத்தில் கூட அவர் மௌனியாக இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுந்துள்ளது.
News January 17, 2026
₹3 லட்சம் மெஷினுடன் வந்த சுப்மன் கில்: குடிநீர் பீதியா?

இந்தியா-நியூசிலாந்து தொடரின் இறுதிப்போட்டி இந்தூரில் நடக்கவுள்ளது. இந்நிலையில், கேப்டன் சுப்மன் கில், ₹3 லட்சம் மதிப்புள்ள அதிநவீன வாட்டர் பியூரிஃபையரை தனது ஹோட்டல் அறைக்கே கொண்டு வந்துள்ளாராம். பாட்டில் நீரையே மீண்டும் சுத்திகரித்து குடிக்கிறாராம். இது, இந்தூரில் குடிநீர் மாசு பிரச்னையால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கையா அல்லது அவரது தனிப்பட்ட பாதுகாப்பு நடைமுறையா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.


