News January 23, 2025
ஜல்கான் ரயில் விபத்து: PM மோடி இரங்கல்

மகாராஷ்டிரா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ₹1.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000மும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஜல்கான் அருகே சென்றுகொண்டிருந்த EXP ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், கீழே குதித்தவர்களில் 12 பேர் மற்றொரு ரயில் மோதி உயிரிழந்தனர்.
Similar News
News December 10, 2025
விஜய் போட்டியிடும் தொகுதி இது தானா?

TVK வியூகக் குழு எடுத்த சர்வேயில் விஜய் போட்டியிடுவதற்கு 3 தொகுதிகள் உகந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாம். திருச்சி கிழக்கு, மதுரை மேற்கு, திருவாடானை ஆகிய தொகுதிகள் தான் அவை. விஜய் தனது பிரசார பயணத்தை திருச்சி கிழக்கில் இருந்து தொடங்கியதால், அவர் அங்கு போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாம். அங்கு விஜய்க்கு சாதகமான களநிலவரம் இருப்பதாகவும் சர்வேயில் தெரியவந்துள்ளதாம். விஜய் எந்த தொகுதியில் போட்டியிடலாம்?
News December 10, 2025
பொங்கல் பரிசு ரேஷன் கார்டுகளுக்கு ₹5,000?

<<18520687>>புதுச்சேரியில் இன்று ரேஷன்<<>> அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து TN-ல் எப்போது என்ற கேள்வி சோசியல் மீடியாக்களை ஆட்கொண்டுள்ளது. 2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் TN அரசு ரொக்கத்தையும் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2021-ல் தேர்தலுக்கு முன்பு அதிமுக அரசு ₹2,500 வழங்கியது. அதே பாணியில் திமுக அரசு ₹3,000 – ₹5,000 வரை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 10, 2025
தமிழகத்தில் களமிறங்கும் ராகுல், பிரியங்கா!

2026 தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா காந்தி TN-ல் பிரசாரத்திற்காக களமிறங்க உள்ளனர். கிராம கமிட்டி மாநில மாநாட்டில் ராகுல் பங்கேற்பார் என்றும், பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கு தங்கபாலு, திருநாவுக்கரசர், ஜோதிமணி உள்ளிட்ட தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


