News January 23, 2025
ஜல்கான் ரயில் விபத்து: PM மோடி இரங்கல்

மகாராஷ்டிரா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ₹1.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000மும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஜல்கான் அருகே சென்றுகொண்டிருந்த EXP ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், கீழே குதித்தவர்களில் 12 பேர் மற்றொரு ரயில் மோதி உயிரிழந்தனர்.
Similar News
News November 23, 2025
நம்மிடம் இருக்க வேண்டிய அவசர உதவி எண்கள்

அவசர உதவி எண்கள், பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகின்றன. இவை மருத்துவ அவசரம், விபத்து போன்ற அவசர நிலைகளில், உடனடி உதவியை அணுக வழிகாட்டுகின்றன. சரியான நேரத்தில் உயிரை பாதுகாக்க உறுதுணையாக உள்ள உதவி எண்கள் என்னென்ன, அவை எதற்கு பயன்படுகின்றன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News November 23, 2025
சண்டிகர் யாருக்கு சொந்தம்? விளக்கம்

பஞ்சாப், ஹரியானாவின் பொதுவான தலைநகராக சண்டிகர் உள்ளது. இந்நிலையில், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், புதுச்சேரி உள்ளிட்ட பிற யூனியன் பிரதேசங்களை போல சண்டிகரையும் மாற்ற, மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதை, பஞ்சாப் பாஜக, AAP உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. ஆனால், இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
News November 23, 2025
பள்ளி மாணவி கர்ப்பம்.. 19 வயது பையன் சிக்கினான்

திருச்சியில் <<18313662>>பள்ளி மாணவி கர்ப்பமான<<>> செய்தி அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதேபோன்று மற்றொரு சம்பவம் கடலூர், குறிஞ்சிப்பாடி அருகே நடந்துள்ளது. 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமிக்கும், 19 வயது இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகியதால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். விஷயம் வெளியே தெரிந்ததை அடுத்து, இளைஞர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


