News December 6, 2024
பாதியில் நிற்கும் ஜல் ஜீவன் திட்டம்

வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்ட இலக்கை அடைய மத்திய அரசிடம் ₹1,700 கோடி நிதியை எதிர்பார்த்து TN குடிநீர் வாரியம் காத்திருக்கிறது. மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஜல் ஜீவன் மிஷன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ₹4,900 கோடி நிதி அளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், ₹1,700 கோடி நிலுவையில் இருப்பதால் மாநில அரசுக்கு கடும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
Similar News
News November 10, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

தமிழகத்தில் இன்று முதல் 13-ம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. இன்று தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும், நாளை ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். அதேபோல், 13-ம் தேதி கோவை, நீலகிரி, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News November 10, 2025
வரி விதிப்பை விமர்சிப்பவர்கள் முட்டாள்கள்: டிரம்ப்

வெளிநாட்டு பொருள்கள் மீதான சுங்க வரியை விமர்சனம் செய்பவர்கள் முட்டாள்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு பங்கு சந்தை உயர்ந்துள்ளது எனவும், ஏறக்குறைய பணவீக்கம் இல்லாத நாடாக USA இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். மேலும், வரி விதிப்பதன் மூலம் உலகின் மிக பெரிய பணக்கார நாடாக USA மாறி இருப்பதாக கூறிய அவர், தற்போது நமது நாடு அனைவராலும் மதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
News November 10, 2025
இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை ₹1,000… மு.க.ஸ்டாலின்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெரும்பான்மையான விண்ணப்பங்கள் மகளிர் உரிமைத்தொகைக்காக வந்துள்ளன; தகுதியுள்ள அனைவருக்கும் ₹1,000 வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை பாதியில் நிறுத்திவிடுவார்கள் என சிலர் அரசியல் உள்நோக்கத்தோடு பேசுகின்றனர். அதை பற்றி எல்லாம் கவலைப்பட போவதில்லை. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் மகளிர் உரிமைத் தொகை தொடரும் என உறுதியளித்தார்.


