News March 24, 2025
ஜாக்டோ ஜியோ போராட்டம்: அடுத்து என்ன?

TN முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மீண்டும் 30ஆம் தேதி உயர்மட்ட நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதுவரை, அரசுக்கு கால அவகாசம் கொடுக்கும் வகையில், ஒரு வாரம் காத்திருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குள், விதி எண் 110 கீழ் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Similar News
News December 10, 2025
விஜய் உடன் கூட்டணி.. அமைச்சர் அறிவித்தார்

புதுச்சேரியில் பரப்புரை செய்த விஜய், அங்கு ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பற்றி ஏதும் பேசாமல், அவர்களுடன் கூட்டணியில் உள்ள பாஜகவை மட்டுமே விமர்சித்திருந்தார். இதனால் தவெக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அமையலாம் என அரசியல் களத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில், தவெகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி CM ரங்கசாமிக்கு தான் தெரியும் என்று புதுச்சேரி அமைச்சர் லஷ்மி நாராயணன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
மீண்டும் ரத்து செய்யப்படும் இண்டிகோ விமானங்கள்

இன்று, நாடு முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் பெங்களூருவில் இருந்து மட்டும் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகியுள்ளது. கடுமையான நெருக்கடிக்குப் பிறகு, தங்களது விமான சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக நேற்று, இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் அறிவித்திருந்தார். இந்த சூழலில், விமான சேவைகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
News December 10, 2025
இவர்களிடம் இருந்து கடனை திரும்பப் பெறுவது கடினமாம்..

கடன் கொடுப்பதை விட, அதை திரும்பப் பெறுவது தான் சிரமமாக உள்ளது என்பதே கடன் கொடுப்பவர்களின் புலம்பலாக உள்ளது. குறிப்பாக, ஜோதிடத்தின் படி மேஷம், மகரம், சிம்மம், மிதுனம், துலாம் ராசிக்காரர்களிடம் கொடுத்த கடனை திரும்பப் பெறுவது சிரமம் என நம்பப்படுகிறது. ஏனென்றால், சரியான திட்டமிடல் இல்லாததால், அவர்கள் அடிக்கடி பணப் பிரச்னையில் சிக்கிக் கொள்வார்களாம். உஷாரா இருங்க.


