News March 24, 2025
ஜாக்டோ ஜியோ போராட்டம்: அடுத்து என்ன?

TN முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மீண்டும் 30ஆம் தேதி உயர்மட்ட நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதுவரை, அரசுக்கு கால அவகாசம் கொடுக்கும் வகையில், ஒரு வாரம் காத்திருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குள், விதி எண் 110 கீழ் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Similar News
News September 16, 2025
பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. உடனே இத பண்ணுங்க!

வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் வரும் 30-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்திருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளால், அதிகரிக்கும் மோசடியில் இருந்து தப்பிக்க இந்த அறிவுரை வழங்கியுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், அந்தந்த வங்கிக் கணக்குகளில் தனித்தனியாக KYC அப்டேட்டை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News September 16, 2025
இந்திய அணியின் புதிய ஸ்பான்சர் யாரு தெரியுமா?

ஆன்லைன் கேமிங் தடை சட்டம் அமலான நிலையில், Dream 11 உடனான ஒப்பந்தத்தை BCCI நிறுத்தியது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸிக்கான ஸ்பான்சர்ஷிப்பை Apollo Tyres பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு போட்டிக்கு ₹4.5 கோடி அளவில் ஜெர்ஸிக்கான ஸ்பான்சர்ஷிப்பை இந்நிறுவனம் வழங்கவுள்ளதாம். 2027 வரை ₹579 கோடிக்கு இந்நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் BCCI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News September 16, 2025
பாமக MLA-க்கள் ஒற்றுமையா இருக்கணும்: உதயநிதி

சேலத்தில் நடந்த அரசு விழா ஒன்றில் பாமக MLA-க்களான அருள் (ராமதாஸ் தரப்பு), சதாசிவம் (அன்புமணி தரப்பு) ஆகியோர், தமிழக அரசை பாராட்டியிருந்தனர். இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த 2 MLA-க்கள் போட்டி போட்டு அரசை பாராட்டியதாக உதயநிதி கூறியுள்ளார். மேலும், இருவரும் ஒரே மாதிரி பேசியதாக தெரிவித்த அவர், இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என, பாமக பிரச்னையை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.