News March 24, 2025
ஜாக்டோ ஜியோ போராட்டம்: அடுத்து என்ன?

TN முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மீண்டும் 30ஆம் தேதி உயர்மட்ட நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதுவரை, அரசுக்கு கால அவகாசம் கொடுக்கும் வகையில், ஒரு வாரம் காத்திருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குள், விதி எண் 110 கீழ் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Similar News
News November 15, 2025
காங்கிரஸை கலைத்து விடுங்கள்: KTR

பிஹார் தேர்தல் முடிவை போன்று தான் தமிழகத்திலும் முடிவு இருக்க போகிறது என்று KT ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். காங்., கட்சியை கலைத்து விடுங்கள் என்று கூறிய அவர், நாட்டுக்கும் ஊருக்கும் காங்., ஆகாது என்றும் விமர்சித்தார். வீணாய்ப் போன காங்., கட்சியை திமுக தான் தூக்கிப் பிடிக்கிறது என்றும் காட்டமாக தெரிவித்தார். பிஹார் தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்., 6 இடங்களில் மட்டுமே வென்றது.
News November 15, 2025
100 நாள் வேலை திட்டத்தில் இனி 4 மணி நேரம் வேலை

₹2,000 உதவித்தொகையை ₹6,000 ஆக உயர்த்த கோரி தமிழகம் முழுவதும் கடந்த 11-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவர்களை அழைத்து பேசினார். இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் கூறும்போது, உதவித்தொகை ₹1,000 உயர்த்தப்படும்; மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் இனி 4 மணி நேரம் வேலை செய்தால் போதும் என தலைமை செயலாளர் உறுதியளித்ததாக தெரிவித்தனர்.
News November 15, 2025
மணிரத்னம் ஹீரோயினாக ஆசை: கயாடு லோஹர்

‘டிராகன்’ படம் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட கயாடு லோஹர், நல்ல கதையம்சம் இருந்தால் எந்த ஹீரோவுடனும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார். அதேநேரம், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும், கவுரி கிஷன் மீதான உருவகேலிக்கு பதிலளித்த அவர், எல்லா துறைகளிலும் விமர்சனங்கள் வரும், அதிலிருந்து தப்பவே முடியாது என்றும் கூறியுள்ளார். இவர் ‘STR 49’ படத்தில் நடித்து வருகிறார்.


