News March 24, 2025
ஜாக்டோ ஜியோ போராட்டம்: அடுத்து என்ன?

TN முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். மீண்டும் 30ஆம் தேதி உயர்மட்ட நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதுவரை, அரசுக்கு கால அவகாசம் கொடுக்கும் வகையில், ஒரு வாரம் காத்திருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குள், விதி எண் 110 கீழ் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Similar News
News December 8, 2025
கோவா தீ விபத்து: 4 பேர் கைது, 3 அதிகாரிகள் சஸ்பெண்ட்

<<18492944>>கோவா தீ விபத்து<<>> தொடர்பாக, விடுதி நிர்வாகத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், தீ பாதுகாப்பு விதிகளை இரவு விடுதி பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, பாதுகாப்பு விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் அனுமதி அளித்த 3 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சம்பவம் குறித்த முழு அறிக்கையை விசாரணைக்குழு ஒருவாரத்தில் சமர்ப்பிக்கும் என CM பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
கடன் வாங்கியவர்களுக்கு GOOD NEWS

RBI ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்ததை தொடர்ந்து, பல வங்கிகள் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. அதன்படி, PNB 8.35%-ல் இருந்து 8.10%ஆகவும், Bank of Baroda 8.15%-ல் இருந்து 7.90% ஆகவும், Bank of India (BOI) 8.35%-ல் இருந்து 8.10%-ஆகவும் குறைத்துள்ளன. இதனால், வீடு, கார், தனிநபர் கடனுக்கான வட்டி வெகுவாக குறைந்துள்ளது. இது கடன் வாங்கிய நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
News December 8, 2025
செங்கோட்டையன் விலகலுக்கு இபிஎஸ் காரணம்: டிடிவி

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு சென்றதற்கு EPS தான் காரணம் என TTV குற்றம் சாட்டியுள்ளார். செங்கோட்டையன் பொதுச்செயலாளர் பதவியோ, CM பதவியோ கேட்கவில்லை. ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தினார். ஆனால், துரோக சக்தியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரே KAS, வேறு கட்சிக்கு சென்றுள்ளார் எனக் கூறிய அவர், TVK கூட்டங்களை செங்கோட்டையன் சிறப்பாக வழிநடத்துவார் என்றார்.


