News April 1, 2024
அந்தர் பல்டி அடிக்கும் ஜெய்சங்கர்

கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அந்தர் பல்டி அடிப்பதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். அவர் பேசுகையில், ‘2015இல் தகவல் அறியும் விண்ணப்பத்தில் தான் அளித்த பதிலை ஜெய்சங்கர் படித்து பார்க்க வேண்டும். கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்று இந்தியா அங்கீகரித்ததை 2015இல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சரி எனக் கூறியிருந்தார். இப்போது அந்தர் பல்டி அடிப்பது ஏன்?’ கேள்வி வினவியுள்ளார்.
Similar News
News August 12, 2025
துருவ் விக்ரமுடன் மீண்டும் ஜோடி சேரும் அனுபமா

துருவ் விக்ரமின் 4-ம் படத்துக்கான பூஜை அண்மையில் நடந்துள்ளது. தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார். இதில், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், கேதிகா சர்மா ஆகிய 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். AR ரஹ்மான் இசையமைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருவ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதிலும் அனுபமா தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.
News August 12, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 12 – ஆடி 27 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.
News August 12, 2025
விவசாயிகளை திமுக பழிவாங்குகிறது: இபிஎஸ்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குவதாக இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பேசிய அவர், பெங்களூரு சென்று மலர்களை விற்பதை தடுக்கும் வகையில் ₹20 கோடியில் சர்வதேச ஏல மையத்தை கடந்த அதிமுக ஆட்சியில் இப்பகுதியில் அமைத்தோம், ஆனால் தற்போது அது பூட்டிக்கிடப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியே இதற்கு காரணமெனவும் தெரிவித்துள்ளார்.