News April 15, 2024

ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

image

ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் சிக்கியுள்ள 3 தமிழர்கள் உட்பட 17 இந்தியர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சருடன், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்த ஜெய்சங்கரிடம், விரைவில் சரக்குக் கப்பலில் உள்ள இந்தியர்களை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்கப்படுமென ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News

News September 18, 2025

சீன மாஸ்டர்ஸ்: காலிறுதியில் பி.வி.சிந்து

image

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். 6-ம் நிலையில் உள்ள தாய்லாந்தின் போர்ன்பாவி சோச்சுவாங்கை எதிர்கொண்ட அவர், 21 – 15, 21 -15 என்ற கணக்கில் வெற்றியடைந்தார். சமீபகாலமாக பெரிய வெற்றியை பெறாமல் உள்ள சிந்து, இந்த தொடரில் தடம் பதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் போராடி வருகிறார்.

News September 18, 2025

இவர்களுக்கு ₹1000 மகளிர் உரிமை தொகை கிடைக்காது

image

மகளிர் உரிமை தொகை குறித்த அறிவிப்பு செப்.15-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு, எதுவும் வெளியாகாததால் பெண்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், தகுதியில்லாதவர்களுக்கு ₹1000 கிடையாது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தகுதி இல்லாமல் அரசு பணத்தை அனைவருக்கும் எடுத்துகொடுக்க முடியாது எனக் கூறிய அவர், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்பட்ட தகுதியான மனுக்களுக்கு ₹1000 வழங்கப்படும் என்றார்.

News September 18, 2025

உலகில் விளங்க முடியாத வினோதங்கள்

image

உலகில் கண்டறியப்பட்ட பழமையான பொருள்களில் சில வினோதமாகவும் மர்மமாகவும் உள்ளன. அவை எதற்கு? ஏன்? யார் உருவாக்கியது? என்று பல கேள்விகளுக்கு இதுவரை எந்த பதில்களும் இல்லை. இவ்வாறான விசித்திரமான மர்மமான பொருள்களின் போட்டோக்களை மேலே கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்கள். இதேபோல், மர்மம் நிறைந்த பொருள்கள் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!