News April 15, 2024

ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

image

ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் சிக்கியுள்ள 3 தமிழர்கள் உட்பட 17 இந்தியர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சருடன், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்த ஜெய்சங்கரிடம், விரைவில் சரக்குக் கப்பலில் உள்ள இந்தியர்களை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்கப்படுமென ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News

News August 19, 2025

EPS இத்துடன் நிறுத்த வேண்டும்: அமைச்சர் எச்சரிக்கை

image

ஆம்புலன்ஸ் விவகாரத்தில் <<17450249>>EPS<<>> இத்துடன் நிறுத்துக் கொள்வது நல்லது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். ஆம்புலன்ஸ் பயணிக்கும் பிரதான சாலைகளில் EPS பிரச்சாரம் செய்வதாகவும், ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்டுவது அவரது தரத்தை குறைத்துவிடும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக, இனி தன்னுடைய பிரச்சாரத்திற்கு மத்தியில் ஆம்புலன்ஸ் வந்தால், அதன் டிரைவர் பேஷண்ட் ஆவார் என EPS எச்சரித்து இருந்தார்.

News August 19, 2025

தங்கம் விலை ₹1,680 வரை குறைந்தது

image

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10-ம் தேதி சவரனுக்கு ₹75,560-க்கு விற்பனையான தங்கம் விலை, சுமார் ₹1,680 வரை குறைந்து இன்று ₹73,880க்கு விற்பனையாகிறது. 10 நாள்களாக எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த வெள்ளி விலையும் இன்று ₹1000 குறைந்துள்ளது. வரும் நாள்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும் சூழல் இருப்பதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 19, 2025

5 ரூபாய் டாக்டர் காலமானார்

image

சென்னையில் ₹5-க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் வேணி (71) மாரடைப்பால் காலமானார். 1 லட்சத்திற்கும் அதிகமான பிரசவங்களை பார்த்துள்ள இவர், கணவர் இறந்த பின்பு, அவரது ₹5 சேவையை தொடர்ந்து வந்தார். அவருடைய இழப்பை கேட்டு சென்னை மக்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர். முன்னதாக, இவரது கணவர் டாக்டர் ஜெயச்சந்திரன் 48 ஆண்டுகளாக ₹5-க்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில், கடந்த 2018-ல் காலமானார்.

error: Content is protected !!