News April 15, 2024
ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

ஈரான் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் சிக்கியுள்ள 3 தமிழர்கள் உட்பட 17 இந்தியர்களை விடுவிப்பது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சருடன், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்த ஜெய்சங்கரிடம், விரைவில் சரக்குக் கப்பலில் உள்ள இந்தியர்களை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்கப்படுமென ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
BREAKING: ஆலோசனைக் கூட்டத்தை ஒத்திவைத்தார் OPS

டிச.15-ல் நடைபெற இருந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக OPS அறிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முடிவு செய்யவில்லை என்றால், டிச.15-ல் உரிமைப் மீட்பு குழுவை இயக்கமாக மாற்றுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அவரின் ஆதரவாளர்கள் கூறியிருந்தனர். இதற்கிடையில், கடந்த வாரம் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த நிலையில், கூட்டத்தை OPS ஒத்திவைத்துள்ளார்.
News December 13, 2025
கேன்சரை தடுக்கும் கொய்யா!

நமது ஊர்களில் எளிதாக கிடைப்பதால் கொய்யா பழத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை எனக்கூறும் டாக்டர்கள், அது கேன்சரையே தடுப்பதாக தெரிவித்துள்ளனர். *ஆய்வுகளின் படி, கொய்யாவில் உள்ள லைகோபீன் என்ற கரோட்டினாய்டு, கேன்சர் செல்கள் உருவாவதையும், அவற்றின் வளர்ச்சியையும் தடுக்கிறது *இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *நார்ச்சத்து வயிறு தொடர்பான பிரச்னைகளை சரி செய்கிறது.
News December 13, 2025
மேகதாட்டு அணைக்கு எதிராக SC-ஐ நாடுவோம்: துரைமுருகன்

மேகதாட்டு அணை தொடர்பாக TN அரசு சார்பில் SC-ல் மறுபரிசீலனை மனு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். SC-ல் தெரிவிக்கப்பட்டுள்ள சில கருத்துக்கள் முரணாக உள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், டெல்டா விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கர்நாடகாவின் முயற்சியை திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


