News October 4, 2025

ஜெய்சங்கர் – பிரேசில் சிறப்பு ஆலோசகர் சந்திப்பு

image

பிரேசில் அதிபரின் சிறப்பு ஆலோசகரும், தூதருமான செல்ஸோ அமோரிமை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் சந்தித்துள்ளார். அப்போது இருநாட்டு ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் சர்வதேச விஷயங்களை பேசியுள்ளனர். மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த அமோரிம், இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு, எரிசக்தி, மருத்துவம் மற்றும் மருந்துகள் குறித்து ஆலோசித்துள்ளார்.

Similar News

News October 4, 2025

கரூர் துயரம்: கைது செய்ய விரைந்தது போலீஸ்

image

கரூர் துயரம் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவில் நாமக்கல் SP விமலா, SP ஷியாமளா தேவியை இணைத்துக்கொள்ள ஐ.ஜி. அஸ்ரா கர்க்குக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில், ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஆனந்த், நிர்மல் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க சேலம், நாமக்கல், சென்னை உள்ளிட்ட இடங்களில் தனிப்படை வலைவீசி தேடி வந்தது. இந்நிலையில், அவர்களை கைது செய்ய போலீசார் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

News October 4, 2025

மூலிகை: துத்திக்கீரை மருத்துவ பயன்கள்!

image

துத்திக் கீரையை நறுக்கி கொதிக்க வைத்து, சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து ரசமாக அருந்தினால், உடல் சூடு தணியும் *துத்தி இலையுடன் ஆமணக்கு எண்ணெய்யை வதக்கி, வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டினால், கட்டிகள் உடையும் *துத்தி இலையை கொதிக்க வைத்து, அந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் ஈறு பிரச்னைகள் தீரும் *துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும். SHARE.

News October 4, 2025

இனி காத்திருக்க வேண்டாம்: உடனே கிளியராகும் செக்

image

காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை ஒரு மணி நேரத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி டெபாசிட் செய்த செக்கை வங்கிகள் மாலை 7 மணிக்குள் பரிசீலிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் செக் தானாகவே அங்கீகரிக்கப்பட்டு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும். தொடக்கத்தில் செக் பரிவர்த்தனைக்கு ஒரு வாரமான நிலையில் அது தற்போது ஒருநாளாக இருந்து வந்தது.

error: Content is protected !!