News April 8, 2025

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு.. 4 பேருக்கு ஆயுள்

image

ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 மே மாதம் 8 குண்டுகள் வெடித்ததில் 71 பேர் பலியான நிலையில், 180 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் அஸ்மி, ஷாபாஸ், சைஃப்-உர்-ரஹ்மான், முகமது சயீப்-க்கு சிறப்பு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இதே வழக்கில் முன்பு 4 பேருக்கும் தூக்கு விதிக்கப்பட்டது. அதன் மேல்முறையீடு மனு SC-ல் நிலுவையில் உள்ளது.

Similar News

News January 9, 2026

காணாமல் போன போன், அடுத்து நடந்ததை பாருங்க!

image

மொபைல் போனை தொலைத்துவிட்டால், அதை மீண்டும் கண்டுபிடிப்பது கடினம் என்றுதான் நினைப்போம். அப்படித்தான், பெங்களூருவில் போனை தொலைத்துவிட்ட கல்லூரி மாணவி ஒருவர், எதற்கும் இருக்கட்டுமே என்று போலீஸின் ‘112’ நம்பருக்கு போன் செய்து புகாரளித்தார். அட, என்ன ஆச்சரியம்! 8 நிமிடத்தில் அங்குவந்த போலீஸ், GPS உதவியுடன் உடனே போனை கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளனர். ஆகவே, போன் தொலைந்தால் புகார் அளிக்க தயங்காதீர்.

News January 9, 2026

கனமழை: 14 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்

image

நாளை சனிக்கிழமை என்றாலும், பெரும்பாலான மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் இயங்கும். இந்நிலையில், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் நாளை மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழையும் பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், மாணவர்கள் குடை, ரெயின் கோட்டை எடுத்துச் செல்லுங்கள். SHARE IT.

News January 9, 2026

துணை முதல்வராவார் பிரேமலதா: சுதீஷ் ஆருடம்

image

பிரேமலதா துணை முதல்வராக வேண்டும் என தேமுதிக பொருளாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். கடலூர் தேமுதிக மாநாட்டில் பேசிய அவர், விருத்தாசலம் தொகுதியில் வெற்றிபெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார் எனக் குறிப்பிட்டார். தற்போது அதே தொகுதியில் போட்டியிட்டு வென்று பிரேமலதா துணை முதல்வராக வேண்டும் எனத் தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக பேசிய அவர், 10, 15 சீட்களுக்காக தேமுதிக இல்லை எனவும் கூறினார்.

error: Content is protected !!