News April 8, 2025
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு.. 4 பேருக்கு ஆயுள்

ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 மே மாதம் 8 குண்டுகள் வெடித்ததில் 71 பேர் பலியான நிலையில், 180 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் அஸ்மி, ஷாபாஸ், சைஃப்-உர்-ரஹ்மான், முகமது சயீப்-க்கு சிறப்பு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இதே வழக்கில் முன்பு 4 பேருக்கும் தூக்கு விதிக்கப்பட்டது. அதன் மேல்முறையீடு மனு SC-ல் நிலுவையில் உள்ளது.
Similar News
News January 20, 2026
பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்தினால் என்ன ஆகும்?

பாலூட்டும் தாய்மார்கள் மது அருந்தக்கூடாது. தாய் அருந்தும் மது ரத்தத்தின் வழியாக பாலில் கலக்குமாம். அந்த பாலை குழந்தைகள் அருந்தும்போது, அவர்கள் உடலிலும் மது கலக்கிறது. குழந்தைகளின் கல்லீரல் மிகவும் மென்மையானது என்பதால், மதுவை அவர்களது உடலால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் குழந்தைகளில் மூளை வளர்ச்சி, கல்லீரல் செயல்பாடு பாதிக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். விழிப்புணர்வுக்காக SHARE பண்ணுங்க.
News January 20, 2026
BREAKING: விஜய் புதிய அறிவிப்பு

தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் பனையூரில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில், தேர்தல் பிரசார குழுவினர் மட்டுமே பங்கேற்பர் என விஜய்யின் ஒப்புதலோடு தெரிவிப்பதாக புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டுள்ளார். இதில், மாநில & மாவட்ட வாரியாக 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.
News January 20, 2026
மார்ச் 8-ம் தேதி திருச்சியில் திமுக மாநாடு

சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பெயரில் திருச்சியில் மார்ச் 8-ம் தேதி, 10 லட்சம் தொண்டர்கள் கூடும் அளவுக்கு மாநாட்டை நடத்தும் தீர்மானமும் ஒன்று. இதேபோல் மாநாட்டை தொடர்ந்து வீடு வீடாக சென்று திமுகவின் சாதனைகளை பிரசாரம் செய்யவும் திமுக திட்டமிட்டுள்ளது.


