News April 8, 2025
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு.. 4 பேருக்கு ஆயுள்

ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 மே மாதம் 8 குண்டுகள் வெடித்ததில் 71 பேர் பலியான நிலையில், 180 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் அஸ்மி, ஷாபாஸ், சைஃப்-உர்-ரஹ்மான், முகமது சயீப்-க்கு சிறப்பு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இதே வழக்கில் முன்பு 4 பேருக்கும் தூக்கு விதிக்கப்பட்டது. அதன் மேல்முறையீடு மனு SC-ல் நிலுவையில் உள்ளது.
Similar News
News April 17, 2025
5 ஆண்டுகளுக்கு பிறகு.. DC-யின் மாஸ் ரெக்கார்ட்!

18 வருட IPL வரலாற்றில் சூப்பர் ஓவரில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை DC அணி படைத்துள்ளது. இதுவரை 5 சூப்பர் ஓவர்களில் விளையாடி, அவற்றில் 4-ல் DC(முன்னர் Delhi Daredevils) வெற்றி பெற்றுள்ளது. இந்த பட்டியலில் PBKS அணி, 3 வெற்றிகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளது. நேற்றைய மேட்ச் யாரு பாத்தீங்க?
News April 17, 2025
அட்சய திருதியில் ஏன் தங்கம் வாங்க வேண்டும்?

சித்திரை மாத அமாவாசைக்கு அடுத்த வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் இந்த நாளில், தானங்கள் செய்து புண்ணியத்தைப் பெறுவது மிகவும் சிறப்பு. இந்த நாளில் செய்யப்படும் புதிய தொடக்கங்கள், முதலீடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும் என்பது நம்பிக்கை. வரும் ஏப்ரல் 30-ம் தேதி இந்த திருதியை வருகிறது.
News April 17, 2025
சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் – வலுக்கும் கண்டனம்

நாங்குநேரியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சாதிய தாக்குதலுக்குள்ளான மாணவர் சின்னத்துரை மீண்டும் தாக்கப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இன்ஸ்டா மூலம் பழகிய நபர்கள், சின்னத்துரையை தனியாக அழைத்து தாக்கியதாகவும் முந்தைய தாக்குதலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சின்னத்துரையை தாக்கியவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என கண்டன குரல்கள் வலுத்துள்ளன.