News September 29, 2025
டிவிக்கு ஜெயில்.. பாக்., டீமை கிண்டலடித்த பாக்., Ex. வீரர்!

இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மண்ணை கவ்வுவதை ஜீரணிக்க முடியாமல் பாகிஸ்தான் ரசிகர்கள் தவித்து வருகின்றனர். நேற்றைய போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா வெளியிட்ட பதிவு, வைரலாகி வருகிறது. நேற்று தோல்வியடைந்ததால், டிவியை கோபத்தில் உடைத்துவிடக்கூடாது என்பதற்காக, அதனை இரும்பு கம்பிகளுக்குள் பூட்டிவைத்திருக்கும் போட்டோவை பகிர்ந்து அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Similar News
News September 29, 2025
கரூரில் 2-வது நாளாக தொடரும் விசாரணை

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக கரூரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். நேற்று கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், இன்று உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களுடைய உறவினர்களிடம் கூட்டத்திற்கு சென்ற நேரம், தொடர்புகொள்ள முடிந்ததா உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். மேலும், அவருக்கு உதவ 5 பேர் கொண்ட குழுவினர் இதர தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
News September 29, 2025
கரூர் துயரம்.. FIR-ல் வெளியான புதிய தகவல்

கரூர் துயர சம்பவம் தொடர்பான FIR-ல், தனது அரசியல் பலத்தை பறைசாற்ற விஜய் 4 மணி நேரம் காலதாமதம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பரப்புரை நடந்த இடத்தில் கூட்டத்தில் மிதிபட்டு 11 பேர் உயிரிழந்தனர். நெரிசல் அதிகரித்ததால் உயிர் சேதம் ஏற்படுமென எச்சரித்தும் நிர்வாகிகள் கேட்கவில்லை. அசாதாரண சூழலை எச்சரித்தும் TVK பொதுச் செயலாளர் ஆனந்த் காதில் வாங்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News September 29, 2025
குரூப் 2 தேர்வு: ஒரு இடத்துக்கு 650 பேர் போட்டி

குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வை சுமார் 1.34 லட்சம் பேர் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு எழுத 5.53 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று 4.18 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அதன்படி 645 குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்களில், ஒரு இடத்துக்கு மட்டும் 650 பேர் போட்டி போடுகின்றனர். தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு எளிதாக இருந்ததா?