News March 4, 2025
போராட்டத்தை தள்ளிப்போடும் ஜாக்டோ – ஜியோ

தேர்வு நேரம் என்பதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போட திட்டமிட்டுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் சமீபத்தில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அடுத்தக்கட்ட போராட்டத்தை, இம்மாதம் நடத்த திட்டமிட்டிருந்தனர். எனினும், அமைச்சர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதால், மாற்றப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2025
பழிதீர்க்குமா இந்திய அணி?

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மதியம் 2:30 மணிக்கு பலப்பரிட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால், சுவாரசியத்திற்குப் பஞ்சமிருக்காது. 2023 WC ஃபைனலின் தோல்வியை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அதற்கு, இன்று பதிலடி கொடுக்குமா இந்தியா? என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். நீங்க சொல்லுங்க யார் ஜெயிப்பாங்க?
News March 4, 2025
ஓராண்டு நிறைவு.. அம்பானி வீட்டில் கொண்டாட்டம்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சிகள் சுமார் 6 மாதங்கள் வரை நடைபெற்றன. குஜராத் ஜாம்நகரில் Hastakshar ceremony உடன் தொடங்கிய நிகழ்ச்சியில், உலக பிரபலங்கள் பில் கேட்ஸ், மார்க் சக்கர்பர்க், இவாங்கா ட்ரம்ப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
News March 4, 2025
மரண தண்டனை தராவிட்டால் தற்கொலை: நர்வால் தாயார்

காங்கிரஸ் பிரமுகர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை தரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதாக நர்வாலின் அம்மா கூறியுள்ளார். போலீசாரின் நடவடிக்கையில் தனக்கு திருப்தியில்லை என்றும், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு தர முடியாவிட்டால் தனது தற்கொலைக்கு ஹரியானா அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.