News December 5, 2024
ஜெ. ஜெயலலிதா என்னும் ஆளுமை…!!

அம்மா என்ற அதிமுகவினரால் மரியாதையாக அழைக்கப்படும் ஜெயலலிதா மறைந்து 8 ஆண்டுகள் ஆகியும், அவரின் மக்கள் பணிகள் தமிழகத்தின் முக்கிய தலைவராக நிற்கவைக்கிறது. மாணாக்கருக்கு இலவச லேப்டாப், அம்மா உணவகம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, தாலிக்கு தங்கம், மகளிர் காவல் நிலையம் என அவரால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஏராளம். அவர் திட்டங்களால் பயன்பெற்ற ஒரு சம்பவத்தை நீங்கள் கீழே பதிவிடுங்கள்.
Similar News
News November 23, 2025
2-வது டெஸ்ட்: மீண்டெழுமா இந்திய அணி?

கவுஹாத்தி டெஸ்ட்டில், 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்துள்ளது. முத்துசாமி, யான்சனின் அபார ஆட்டத்தால் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்தது. குல்தீப் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இன்றும் போதிய வெளிச்சமின்மையால் 76.1 ஓவர்களே வீசப்பட்டன. போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியாவுக்கு நாளை மிகவும் முக்கியமான நாளாகும்.
News November 23, 2025
நம்மிடம் இருக்க வேண்டிய அவசர உதவி எண்கள்

அவசர உதவி எண்கள், பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகின்றன. இவை மருத்துவ அவசரம், விபத்து போன்ற அவசர நிலைகளில், உடனடி உதவியை அணுக வழிகாட்டுகின்றன. சரியான நேரத்தில் உயிரை பாதுகாக்க உறுதுணையாக உள்ள உதவி எண்கள் என்னென்ன, அவை எதற்கு பயன்படுகின்றன என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News November 23, 2025
சண்டிகர் யாருக்கு சொந்தம்? விளக்கம்

பஞ்சாப், ஹரியானாவின் பொதுவான தலைநகராக சண்டிகர் உள்ளது. இந்நிலையில், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், புதுச்சேரி உள்ளிட்ட பிற யூனியன் பிரதேசங்களை போல சண்டிகரையும் மாற்ற, மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதை, பஞ்சாப் பாஜக, AAP உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடுமையாக எதிர்த்தன. ஆனால், இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


