News December 5, 2024
ஜெ. ஜெயலலிதா என்னும் ஆளுமை…!!

அம்மா என்ற அதிமுகவினரால் மரியாதையாக அழைக்கப்படும் ஜெயலலிதா மறைந்து 8 ஆண்டுகள் ஆகியும், அவரின் மக்கள் பணிகள் தமிழகத்தின் முக்கிய தலைவராக நிற்கவைக்கிறது. மாணாக்கருக்கு இலவச லேப்டாப், அம்மா உணவகம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, தாலிக்கு தங்கம், மகளிர் காவல் நிலையம் என அவரால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் ஏராளம். அவர் திட்டங்களால் பயன்பெற்ற ஒரு சம்பவத்தை நீங்கள் கீழே பதிவிடுங்கள்.
Similar News
News November 23, 2025
உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் ஏற்பாடு: நயினார்

மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பதிலேயே நான்கரை ஆண்டுகளை திமுக வீணடித்து விட்டதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். கஞ்சா, போதை பொருட்களை ஒழிக்காத ஸ்டாலின், சொத்து வரி, மின் கட்டண உயர்வு பற்றி கண்டுகொள்ளவில்லை எனவும் சாடினார். ஆனால் உதயநிதியை முதல்வராக்கும் ஏற்பாடுகளை ஸ்டாலின் செய்து வருவதாக விமர்சித்தார். மேலும் நெல் ஈரப்பத அதிகரிக்க முழு காரணம் திமுகதான் எனவும் தெரிவித்தார்.
News November 23, 2025
16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்யுதா?
News November 23, 2025
10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிச.1-ம் தேதி முதல் டிச.19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக அணுசக்தி மசோதா 2025 தாக்கல் செய்யப்படுகிறது. இதைத்தவிர உயர்கல்வி கமிஷன் மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, கார்பரேட் சட்டங்கள் திருத்த மசோதா உள்ளிட்டவையும் பட்டியலிடப்பட்டு உள்ளது.


