News December 5, 2024

திருச்சி எஸ்.பி.வருண்குமாருக்கு இடும்பாவனம் கார்த்தி சவால்

image

திருச்சி SP வருண்குமாருக்கு NTK நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வருண்குமார் NTK-வை பிரிவினைவாத இயக்கம் என விமர்சித்திருந்தார். இது தொடர்பாக பேசிய கார்த்தி, துணிவு, திராணி இருந்தால் IPS பதவியை ராஜினாமா செய்துவிட்டு தங்களிடம் மோதி பாருங்கள் எனவும் சவால் விடுத்துள்ளார். காக்கி உடையில் இருந்து கொண்டு அரசியல் செய்யக் கூடாது என்றும் அவர் சாடியுள்ளார்.

Similar News

News October 23, 2025

பெரும் உயர்வைக் கண்ட இந்திய பங்குச்சந்தைகள்!

image

இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் உயர்வுடன் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 738 புள்ளிகள் உயர்ந்து 85,165 புள்ளிகளிலும், நிஃப்டி 206 புள்ளிகள் உயர்ந்து 26,074 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. கடந்தாண்டு செப்டம்பரில் சென்செக்ஸ் 85,978 புள்ளிகள் தொட்டதே புதிய உச்சமாக இருந்த நிலையில், மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி செல்வதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News October 23, 2025

RECIPE: உடலை வலுவாக்கும் பாசிப்பயறு கஞ்சி!

image

◆முடி, தோல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் இந்த கஞ்சி உதவும் ➥பாசிப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, நட்ஸ் வகைகளுடன், சிறுதானியங்களை சேர்த்து சத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள் ➥தானியங்கள் குறைவாகவும், பயறு வகைகள் அதிகமாகவும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள் ➥2 ஸ்பூன் அளவு மாவை எடுத்து, நன்கு கரைத்து உப்பு சேர்த்து, கஞ்சியாக்கி குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். SHARE.

News October 23, 2025

பருவமழை எதிரொலி: சுமார் 88% தண்ணீர் சேமிப்பு!

image

தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான மழையால் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிறைந்து வருகின்றன. நீர்வள துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224 TMC ஆகும். இதில், தற்போது 196.897 TMC அதாவது 87.77% தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 14, 141 பாசன ஏரிகளில், 1,522 ஏரிகள் 100%, 1,842 ஏரிகள் 76% முதல் 99% வரை நிரம்பியுள்ளன.

error: Content is protected !!