News August 14, 2025
மழை வெளுக்கும்.. கவனமா இருங்க மக்களே!

சென்னை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்தது. இந்நிலையில், இரவு 10 மணி வரை, கோவை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், தருமபுரி, தஞ்சை, திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தமும் வலுப்பெற்றுள்ளதால், வெளியே செல்லும் போது கவனம் தேவை நண்பர்களே!
Similar News
News August 15, 2025
ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் காலமானார்

இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸின் தந்தை வெஸ் பயஸ் (80) காலமானார். இவர், 1972 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றவர் ஆவார். உடல்நலக் குறைவு & வயது மூப்பு காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் வீரேன் ரஷ்குயின்ஹா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News August 14, 2025
ரெஸ்ட் எடுங்க பாஸ்…ஆனால் இப்படி எடுக்காதீங்க!

ஓய்வு நேரம் குறைந்தால், அதிக அளவு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் ஓஹியோ பல்கலை., நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறைவாக ஓய்வு கொண்டவர்கள் குறைந்த அளவிலேயே மகிழ்ச்சியை அனுபவித்து வருகின்றனர் என கூறும் அந்த ஆய்வு, அளவுக்கு அதிகமாக ஓய்வு எடுப்பது உடல்/மன நலனை பாதிக்கும் என்கிறது. மிக அதிக ஓய்வு பிபி, மன அழுத்தம், துக்கமின்மை, அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துமாம்.
News August 14, 2025
ஒரே நாளில் ₹130 கோடிக்கு இறைச்சிகள் விற்பனை

வட இந்தியாவில் இந்துக்கள் சிவனுக்காக அசைவம் சாப்பிடாமல் 1 மாதம் சவான் விரதம் இருப்பர். ஆக., 9-ல் விரதம் முடிந்த கையோடு, கறி கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்துள்ளது. விளைவாக, ஒரே நாளில் ₹130 கோடிக்கு ஆடு, கோழி இறைச்சிகள் பீகாரில் விற்பனையாகியுள்ளது. விரதம் இருந்த காலக்கட்டத்தில் உ.பி.யில் அசைவ உணவகங்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.