News September 13, 2025
நடிகருக்கு கூட்டம் கூடுவதில் ஆச்சரியமில்லை: தமிழிசை

திருச்சியில் தனது முதல் பயணத்தை தொடங்கி விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மக்கள் குவித்தனர். இந்நிலையில், விஜய்க்கு பெரியளவில் கூட்டம் கூடியது உண்மைதான் என கூறிய தமிழிசை, நடிகருக்கு கூட்டம் வருவதில் ஆச்சரியம் இல்லை என தெரிவித்தார். மேலும் தி.மு.க. அரசின் தவறுகளை மக்கள் மத்தியில் விஜய் தீவிரமாக பரப்ப வேண்டும் என்றும், அதுதான் தமிழக மக்களுக்கு அவர் செய்யும் தொண்டு எனவும் கூறினார்.
Similar News
News September 13, 2025
ASIA CUP: டாஸ் வென்று இலங்கை பந்துவீச்சு

ஆசியக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. தனது முதல் லீக் போட்டியில் ஹாங் காங்கை, வங்கதேசம் எளிதாக வீழ்த்தியது. அதனால் இந்த போட்டியிலும் வெற்றிப்பாதையை தொடர முயற்சிக்கும். அதேசமயம் முதல் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும்.
News September 13, 2025
முதலில் எம்ஜிஆர், அடுத்து அண்ணா: விஜய்யின் வியூகம்

திருச்சி மரக்கடை பகுதியில் எம்ஜிஆர் சிலை முன்பாக பேசிய விஜய், அடுத்ததாக அரியலூரில் சற்றுநேரத்தில் பரப்புரை மேற்கொள்கிறார். இப்போது பேசப்போகும் இடம் அண்ணா சிலை. 1967, 1977 ஆகிய 2 தேர்தல்களில் இந்த இருபெரும் தலைவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தைத் தான் விஜய் 2026-ல் எதிர்பார்க்கிறார். அதனாலேயே, பரப்புரையை அந்த தலைவர்களின் சிலை அருகே இருந்து தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
News September 13, 2025
பாலூட்டும் தாய்மார்கள் இதை மறக்க வேண்டாம்!

தாய்ப்பால் அதிகமாக கொடுத்தால், பால் சுரப்பது அதிகரிக்கும். ஒரு நாளைக்கு 8 முறை வரை குழந்தைகளுக்கு பாலூட்டலாம். நீரிழப்பு தாய்ப்பால் சுரப்பை தடுக்கும். அதனால், உடல் நீரேற்றமாக இருப்பதை உறுதி செய்யுங்கள். ஓட்ஸ், பச்சை இலை காய்கறிகள், பருப்பு, பாதம், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணவும். தாய்ப்பால் கொடுக்காத சமயத்தில் பிரெஸ்ட் பம்ப் கருவியை பயன்படுத்துங்கள். SHARE IT.