News April 2, 2024

பாஜகவிற்கு தமிழர்களை பற்றி கவலையில்லை போல

image

கச்சத்தீவு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை வெளியிடும் பாஜகவிற்கு இலங்கை தமிழர்களை பற்றி கவலையில்லை போல என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து X தளத்தில், கச்சத்தீவு பிரச்னையில் உண்மையில் என்ன நடந்தது என்று பாஜக அரசு 2015இல் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. அந்த கடிதத்தைப் பற்றிக் கேட்டால் பாஜகவினர் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News August 17, 2025

ஆம்புலன்ஸில் வந்து டப்பிங் பேசிய அஜித்: ஏ.ஆர்.முருகதாஸ்

image

நடிகர்கள் நேரத்திற்கு சூட்டிங் வருவதே பெரிய விஷயமாக மாறிப்போன நிலையில், நடிகர் அஜித் விபத்தில் அடிப்பட்டு “ஹாஸ்பிடலில்” சிகிச்சையில் இருந்தபோது ஆம்புலன்ஸில் வந்து டப்பிங் பேசியதாக ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார். நான் உட்பட பல புதுமுக இயக்குநர்களை அஜித்தான் அறிமுகப்படுத்தினார். யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்துள்ளார். எளிதாக இந்த இடத்திற்கு அவர் வரவில்லை எனவும் தெரிவித்தார்.

News August 17, 2025

யார் பாமக தலைவர்: ராமதாஸா? அன்புமணியா?

image

விழுப்புரத்தில் இன்று(ஆக., 17) நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும், நிறுவனரும் ராமதாஸ் தான் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஆக., 9-ல் மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் இன்னும் ஓராண்டுக்கு அன்புமணி தான் தலைவர் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் தான்தான் தலைவர் என தீர்மானம் நிறைவேற்றுவதால் பாமகவினர் குழப்பத்தில் உள்ளனர்.

News August 17, 2025

அன்புமணியின் நியமனங்கள் செல்லாது: ராமதாஸ்

image

அன்புமணி மேலும் ஓராண்டுக்கு பாமக தலைவராக செயல்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றியது செல்லாது என, ராமதாஸ் தலைமையிலான சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்புமணியால் நியமிக்கப்பட்ட பதவி நியமனம், அறிவிப்புகள் செல்லாது என்றும், ராமதாஸால் நியமிக்கப்பட்டவர்கள் அப்படியே தொடர்வர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!