News April 23, 2025
நள்ளிரவு வரை மழை கொட்டப் போகுது..!

தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நள்ளிரவு 1 மணி வரை 5 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 23, 2025
ரத்தன் டாடாவின் தன்னம்பிக்கை வரிகள்..!

▶ தோற்பது அல்ல தோல்வி. முயற்சியே எடுக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய தோல்வி. ▶ வேகமாக நடக்க வேண்டும் என்றால் தனியாக நடந்து செல்லுங்கள். தொலைதூரம் நடக்க வேண்டும் என்றால் குழுவாக மட்டுமே பயணிக்க முடியும். ▶ தலைவர் என்பவர் உச்சியில் அமர்பவர் மட்டுமல்ல, மற்றவர்களைத் தங்களால் இயன்றதைச் செய்வதற்கு ஊக்குவிப்பவர். ▶ ஆழ்ந்த சிந்தனையும், கடின உழைப்பும் இல்லாமல் பெரிய விஷயங்கள் எதையும் அடைய முடியாது.
News April 23, 2025
பும்ரா, மந்தனாவுக்கு இங்கிலாந்தில் கௌரவம்..!

‘கிரிக்கெட் உலகின் பைபிள்’ எனப்படும் லண்டனில் வெளியாகும் விஸ்டன் புத்தகம் ஆண்டுதோறும் 5 வீரர்களை தேர்வு செய்து கௌரவிப்பது வழக்கம். இந்தாண்டு அந்த பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா, மகளிர் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பும்ரா டெஸ்டில் கடந்த ஆண்டு 71 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மந்தனா கடந்த ஒரே ஆண்டில் 1,659 ரன்கள் குவித்துள்ளார்.
News April 23, 2025
ஏஐ வீடியோவால் எரிச்சலான விஜே ரம்யா

பிரபல தொகுப்பாளரான ரம்யா, அவ்வப்போது திரைப்படங்களிலும் தலையை காட்டி வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாவில் கோபத்துடன் பதிவிட்டுள்ள அவர், ஏஐ மூலம் தனது வீடியோவை 3-வது முறையாக குரல் மாற்றம் செய்து தவறாக பயன்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனை உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் விஜே ரம்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.