News March 12, 2025
இரவில் மழை கொட்டப் போகுது

தமிழகத்தில் இன்றிரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News March 12, 2025
இந்தியாவுக்கு வருகை தரும் அமெரிக்காவின் ‘Second Lady’

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இம்மாத இறுதியில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. துணை அதிபராக பதவியேற்றப் பிறகு தனது முதல் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் செய்த நிலையில், தற்போது இரண்டாவது பயணமாக இந்தியா வரவுள்ளார். அவருடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த அவரது மனைவி உஷா, அமெரிக்காவின் ‘Second Lady’-ஆக இந்தியா வருகை தரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 12, 2025
தமிழர்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவார்கள்: சு.வெங்கடேசன்

பாஜகவின் எதேச்சதிகாரப் போக்குக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார். காசித் தமிழ் சங்கத்திற்கு நிதியளிப்பதில் கொடுக்கும் முக்கியத்துவத்தை, தமிழகத்துக்கு கல்விக்கு பணம் தருவதில் BJP அரசு காட்டாதது ஏன் எனவும் வினவியுள்ளார். பட்டினி போட்டாலும் பணியாத தன்மானமும், பகுத்தறிவும் கொண்ட தமிழர்கள் பாஜகவுக்கு செய்ய வேண்டியதை செய்வார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
News March 12, 2025
சென்செக்ஸ் 102 புள்ளிகள் உயர்வு!

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை நேர வர்த்தகப்படி சற்று உயர்வைக் கண்டுள்ளன. சென்செக்ஸ் 102 புள்ளிகள் உயர்ந்து 74,270ஆகவும், நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 22,536ஆகவும் வர்த்தகமாகிறது. இதனால், முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதேநேரத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா சரிந்து ₹87.22 ஆக உள்ளது.