News October 25, 2024

காலை 4 மணி வரை 19 மாவட்டங்களில் மழை காெட்டும்

image

இன்று (அக்.25) காலை 4 மணி வரை 19 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், குமரியில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.

Similar News

News November 6, 2025

கூட்டநெரிசல் மரணங்களால் தான் RCB விற்கப்படுகிறதா?

image

18 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின், கோப்பையை வென்ற RCB விற்பனைக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம், வெற்றி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த கூட்டநெரிசல் மரணங்கள் தான் இதற்கு காரணமா என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக, சட்டப்பூர்வ நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே, RCB அணியின் உரிமம் கைமாற்றிவிடப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. பிர்சனை இருப்பினும், RCB அணியை வாங்க பலமுனை போட்டி நிலவுகிறதாம்.

News November 6, 2025

Snapchat-ல் இனி Perplexity AI

image

நமது Whatsapp-ல் எப்படி மெட்டா AI இணைக்கப்பட்டுள்ளதோ, அதேபோல இனி Snapchat-ல் Perplexity AI இணைக்கப்பட உள்ளது. ஜனவரி, 2026-ல் இருந்து Snapchat பயனர்கள் இந்த வசதியை பெறலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இரு நிறுவனங்கள் இடையே சுமார் ₹3,300 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் காரணமாக ஸ்னாப் நிறுவனத்தின் பங்குகள் விலை 16% வரை உயர்ந்துள்ளது.

News November 6, 2025

‘மனித நேயர்’ மரணமடைந்தார்

image

மனிதாபிமானம் படைத்தவர்களை மரணம் அதிக நாள்கள் வாழ விடுவதில்லை. ஆம்! குஜராத்தை சேர்ந்த காவலர் அரவிந்த அவ்ஹர், மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உதவி செய்யக்கூடிய மனிதநேயமிக்கவர். அப்படி, சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நாய்க்கு உதவி செய்துவிட்டு திரும்பியபோது, வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் இரங்கல் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!