News August 3, 2024
14 மாவட்டங்களில் மழை பெய்யும்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகையில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
இரவில் சந்தித்தார் ஓபிஎஸ்.. மீண்டும் கூட்டணியா?

கோவையில் நேற்று இரவு அண்ணாமலை – OPS சந்தித்து கொண்டது பேசுபொருளாகியுள்ளது. அதிமுக தொண்டர் மீட்புக்குழு நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட இருவரும், சிறிது நேரம் பேசிவிட்டு சென்றுள்ளனர். சமீபத்தில் இருவரும் தனித்தனியாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதனால், NDA கூட்டணியில் மீண்டும் OPS இணைய வாய்ப்பு இருப்பதாக யூகங்கள் எழுந்துள்ளன.
News December 8, 2025
மீண்டும் எப்போது வருவார்கள் Ro-Ko?

ஆஸி., & SA அணியை துவம்சம் செய்து ரசிகர்களை குஷிப்படுத்திய Ro-Ko ஜோடி மீண்டும் எப்போது களத்திற்கு திரும்புவார்கள் என்ற அட்டவணை வெளிவந்துள்ளது. ஜனவரியில் நியூசிலாந்து தொடர், ஜூனில் ஆப்கானிஸ்தான் தொடர், ஜூலையில் இங்கிலாந்து தொடர், செப்டம்பரில் வங்கதேச தொடர், செப்டம்பர் – அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸ் தொடர், அக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்து தொடர் என 2026-ல் மட்டும் 6 சீரிஸில் Ro-Ko விளையாடவுள்ளனர்.
News December 8, 2025
வெறும் வயிற்றில் தேங்காய்: இவ்வளவு நன்மைகளா?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 40-50 கிராம் தேங்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *எலும்பு பிரச்னைகள் வருவதில்லை. *கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, செரிமான பிரச்னைகளுக்கு தீர்வு காண்கிறது. *சரும பொலிவு, முடி வளர்ச்சிக்கு நல்லது * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். அதேசமயம் அதிகப்படியான தேங்காயும் சாப்பிடக்கூடாது.


