News August 3, 2024
14 மாவட்டங்களில் மழை பெய்யும்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகையில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 13, 2025
இதெல்லாம் சாப்பிடுங்க.. உடம்புக்கு நல்லது!

உங்களுக்கு முகத்தில் சோர்வு, வீக்கம், கருவளையம், வறண்ட சருமம், சோர்வான கண்கள் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணருங்கள். இதற்கு மேலே போட்டோக்களில் பரிந்துரைத்துள்ள சத்துகள் நிறைந்த உணவுகள் உங்களுக்கு உதவும். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
News December 13, 2025
கர்நாடக முதல்வராகிறாரா டி.கே.சிவக்குமார்?

கர்நாடகாவில் CM நாற்காலிக்காக நடந்த பனிப்போர் முடிந்ததாக கருதப்பட்ட நிலையில், டி.கே.சிவக்குமார் ஆதரவு MLA புதிய குண்டை வீசியுள்ளார். ஜன.6-ல் முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பார் என கணித்துள்ள இக்பால் ஹுசைன், அதற்கு 99% வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என கூறியிருந்தனர்.
News December 13, 2025
பண மழை கொட்டும் 3 ராசிகள்

சூரிய பகவான் தனுசு ராசியில் நுழைவதால் டிச.16-ம் தேதி மகாதன ராஜயோகம் உருவாகும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், 3 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *மேஷம்: தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். *விருச்சிகம்: பண பிரச்னைகள் முடிவுக்கு வரும். அரசு தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். *கும்பம்: பண வரவு அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும்.


