News June 22, 2024
அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை கொட்டும்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதனால், கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்லுங்கள்.
Similar News
News September 13, 2025
அடுத்தக்கட்ட நடவடிக்கை? செங்கோட்டையன் பதில்

தனது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் டெல்லி சென்று திரும்பிய நிலையில், அவரது அடுத்தக்கட்ட நகர்வை எல்லோரும் உற்று நோக்குகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லோரும் நினைப்பது போல நல்லதையே நினைத்து நல்லதே செய்வோம் என்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
News September 13, 2025
பொன்னில் வடித்த சிலையே ஜான்வி

பாலிவுட், டோலிவுட்டில் கலக்கி வரும் ஜான்வி கபூர், கோலிவுட்டில் எப்போது நடிப்பார் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். அவரின் தாயைப் போலவே வசீகரிக்கும் அழகுடைய ஜான்வி கபூர், இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கிறங்கி போயுள்ளனர். அவருடைய அடுத்த படங்களின் விவரத்தை பார்க்கையில் இன்னும் சில ஆண்டுகளுக்கு தமிழ் ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் என தெரிகிறது.
News September 13, 2025
யார் இந்த சுஷிலா கார்கி?

நேபாளின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள சுஷிலா கார்கி அந்நாட்டின் முதல் பெண் PM ஆவார். * இவர் 2016-ல் நேபாள சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக செயல்பட்டவர். * பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தவர். * 1990-ல் சிறை தண்டனை அனுபவித்தவர். * நேபாளில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு குடியுரிமை தருவது தொடர்பான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியவர்.