News September 19, 2025

5 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்!

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், வரும் 24-ம் தேதி வரை மாநிலத்தில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. அதேபோல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News September 19, 2025

மழை சீசனில் சளி, இருமல் தொல்லையை விரட்டும் தேநீர்!

image

சளி, இருமல், தொண்டை வலி ஆகியவை நீங்க, அதிமதுரம் டீ தான் பெஸ்ட் *ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து, அதில் அதிமதுரம் தூள் அல்லது ஒரு துண்டை சேர்க்கவும் *அதை 5-7 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும் *பின்னர், அதை வடிகட்டி ஒரு டம்ளரில் ஊற்றி, தேவைக்கேற்ப நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்தால், சுவையான அதிமதுரம் டீ ரெடி! இந்த பயனுள்ள தகவலை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும்.

News September 19, 2025

நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி

image

மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு முதல் நபராக DCM உதயநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கண்ணீருடன் இருந்த ரோபோ சங்கரின் மனைவி, மகள்களுக்கு ஆறுதல் கூறி தேற்றினார். மேலும், மேடை கலைஞராக வாழ்க்கை பயணத்தை தொடங்கி, சின்னத்திரை, வெள்ளித்திரையில் சாதித்து தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர் எனவும் தனது X பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

News September 19, 2025

சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயம்

image

சபரிமலை துவார பாலகர்களின் சிலையில் வேயப்பட்ட தங்க கவசத்தில் 4 கிலோ குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவசத்தில் பழுது ஏற்பட்டதாக கூறி, சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. ஆனால், கோர்ட் அனுமதி இல்லாமல் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையானதால், அதை மீண்டும் கொண்டு வந்து சோதித்த போது, தங்கம் குறைந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!