News April 30, 2024
அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும்

தென்மாவட்டங்களில் இரவு 10 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 10, 2026
கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்: இந்தியன் ஆயில்

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக Indian Oil நிறுவனம் அறிவித்துள்ளது. வளைகுடா போரால் உலகளவில் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், மாற்று எரிசக்திகளை உபயோகப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, வேலை நேரத்தை குறைக்க ஹோட்டல்கள் முடிவு எடுத்துள்ளன. அதேநேரம் வீட்டு உபயோக சிலிண்டர் சேவையும் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News March 10, 2026
தேமுதிகவால் திமுக கூட்டணியில் அதிருப்தியா?

பல தேர்தல்களாக கூட்டணியில் இருக்கும் தங்களுக்கு தொகுதிகளை குறைத்துவிட்டு, தேமுதிகவுக்கு அதிகமாக வழங்கியதால் திமுக மீது அதன் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ’தேமுதிகவை நம்பி இவ்வளவு தொகுதிகளை கொடுக்குறீங்களே, அடுத்த எலெக்ஷனுக்கு NDA-வில் இணைந்துவிட்டால் என்ன செய்வது’ என கூட்டணி கட்சிகள் கேட்டதற்கு, தேமுதிக அப்படி செய்யாது என திமுக கேரண்டி கொடுத்ததாக கூறப்படுகிறது.
News March 10, 2026
ஐரோப்பிய நாடுகளுக்கு உதவத் தயார்: ரஷ்யா

போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க தயாராக இருப்பதாக புடின் அறிவித்துள்ளார். அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நீண்டகால ஒத்துழைப்பை வழங்கினால் எண்ணெய் அனுப்புவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்க அமெரிக்கா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.


