News August 9, 2024
6 நாட்களுக்கு மழை கொட்டும்

தமிழகத்தில் இன்று முதல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 11ஆம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. வருகிற 12ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூரில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
Similar News
News December 20, 2025
இனி காஸ்ட்லியான Conditioner வேண்டாம்; USE THIS!

காஸ்ட்லியான Conditioner-களை வாங்கி முடியை பராமரிக்கிறீர்களா? வீட்டிலேயே இயற்கையான முறையில் Conditioner செய்யலாம். ➤கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள் ➤இவற்றை நன்றாக கலந்து, முடியின் வேர்க்கால்களில் இருந்து நுனிப்பகுதி வரை அப்ளை செய்யுங்கள் ➤ஒரு டவலை மிதமான வெந்நீரில் நனைத்து தலைமுடியில் 30 நிமிடங்கள் வரை போர்த்தி விடவும் ➤எப்போதும் போல் ஷாம்பு போட்டு அலசுங்கள். SHARE.
News December 20, 2025
தனியார் பள்ளிகளில் வரும் மாற்றம்.. அரசு புதிய அறிவிப்பு

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தனியார் பள்ளிகளில் கண்டிப்பாக காலை வணக்க கூட்டம் நடத்த வேண்டும் எனவும் தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண்ணை மாணவர்களே பாட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒலிப்பெருக்கி மூலம் பாடல்களை ஒலிப்பரப்பக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை என்பதால் திங்கள் முதல் இது நடைமுறைக்கு வரும் என வாய்ப்புள்ளது.
News December 20, 2025
இந்தியாவை ரிஷிகள்தான் உருவாக்கினார்கள்: RN ரவி

வடமாநிலங்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி தென் மாநிலத்தவர்கள் குறைவாக தெரிந்துவைத்துள்ளனர் என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார். ‘தமிழ் கற்கலாம்’ நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழை கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்திய அவர், மொழியால் மக்களுக்குள் இருக்கும் சுவற்றை உடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவை அரசர்கள் உருவாக்கவில்லை எனவும் ரிஷிகள்தான் உருவாக்கினார்கள் என்றும் பேசியுள்ளார்.


