News August 9, 2024
6 நாட்களுக்கு மழை கொட்டும்

தமிழகத்தில் இன்று முதல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 11ஆம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. வருகிற 12ஆம் தேதி நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூரில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
Similar News
News December 2, 2025
பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

இன்று (டிச.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News December 2, 2025
பொருளாதார குற்றவாளிகளால் ₹57,082 கோடி இழப்பு

நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு நாட்டில் இருந்து தப்பியோடியவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காங்., MP முராரிலால் மீனா லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மொத்தம் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களால் ₹57,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; இவர்களிடம் இருந்து ₹19,817 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
News December 2, 2025
பொருளாதார குற்றவாளிகளால் ₹57,082 கோடி இழப்பு

நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு நாட்டில் இருந்து தப்பியோடியவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காங்., MP முராரிலால் மீனா லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மொத்தம் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவர்களால் ₹57,082 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; இவர்களிடம் இருந்து ₹19,817 கோடி மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


