News March 28, 2024
இந்த ராசியினருக்கு இனிமேல் கஷ்ட காலம்

சனி பகவானின் உக்கிரப் பார்வை பல்வேறு கஷ்டமான சூழ்நிலைகளை உருவாக்கும். அந்த வகையில் கடகம், விருச்சிகம், மகரம், கும்ப ராசியினர் இனிவரும் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிறருக்கு ஜாமின் தருவது, பத்திரங்களில் சாட்சிக் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், எதிர்பாராத இன்னல்கள் தேடி வரும் என்பதால் பரிகாரங்களை செய்து அதன்மூலம் ஆபத்திலிருந்து விடுபடலாம் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 1, 2025
ரெப்போ விகிதம் மேலும் குறைகிறது?

ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி, மேலும் 25பிபிஎஸ் குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ரெப்போ விகிதம் 5.5% உள்ளது. டிச.3 முதல் டிச.5 வரை நடைபெறும் RBI-ன் நிதிக்கொள்கை கமிட்டி கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்படவுள்ளது. பணவீக்க அழுத்தங்கள் தணிந்துள்ளதால் இந்த குறைப்பு இருக்கலாம். அதேநேரத்தில் 2-வது காலாண்டில் நாட்டின் GDP 8.2% உயர்ந்திருப்பதால் மாற்றம் இல்லாமலும் போக வாய்ப்புள்ளது.
News December 1, 2025
காப்பீடு துறையில் 100% அன்னிய நேரடி முதலீடு

காப்பீடு துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். தற்போதைய நிலையில் 74% வரை அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி இருக்கிறது. அந்தவகையில் 82,000 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட உள்ளது. மேலும், மத்திய அரசின் புதிய தலைமுறை நிதி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக 100% முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
News December 1, 2025
இதையெல்லாம் டிரை பண்ணுங்க.. ஜாலியா இருங்க

காலை எழுந்திருப்பது முதல் இரவு தூங்கும் வரை, சில எளிமையான செயல்கள், உடலுக்கு மிகப்பெரிய நிம்மதியான உணர்வை உருவாக்கும். அந்த சிறிய பழக்கவழக்கங்கள் நமது அன்றாட வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. அவை என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


