News October 7, 2025
41 உயிர்களை பாதுகாத்திருக்க வேண்டியது CM கடமை: நயினார்

கச்சத்தீவு பிரச்னையை எழுப்பி, கரூர் விவகாரத்தை CM ஸ்டாலின் திசை திருப்புவதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். விஜய்க்கு கேட்ட இடத்தில் அனுமதி கொடுக்காதது ஏன், 30 ஆம்புலன்ஸ் ஏன் வந்தன, CM உடனடியாக கரூர் வந்தது ஏன் உள்ளிட்ட கேள்விகளுக்கு ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 41 உயிர்களை பாதுகாத்திருக்க வேண்டியது முதல்வரின் கடமை எனவும் நயினார் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 7, 2025
சிறுமி வன்கொடுமை: காமெடி நடிகர் கைது

சென்னையில் விடுதி ஒன்றில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சினிமா இயக்குநரும், காமெடி நடிகருமான பாரதி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை இறந்து போனதால், அவரது தாய் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால், தனிமையில் தவித்த சிறுமியை கவனித்து வந்த, தாயின் தோழி பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். இச்சம்பவத்தில் முக்கிய கட்சியின் நிர்வாகியும் சிக்கியுள்ளார்.
News October 7, 2025
மூலிகை: வசம்பின் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, வசம்பை தூளாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் தொற்று நோய்களும் நீங்கும் *விஷம் அருந்தியவர்களுக்கு உடனே வசம்பு தூளை கொடுத்தால், விஷம் முறிந்துவிடும் *வசம்பு பொடியுடன் கடுக்காய் பொடி, சுக்குப்பொடி, திப்பிலி பொடி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து, நீரில் கொதிக்க வைத்து குடித்தால், சளி, இருமல், வயிறு உப்புசம் ஆகியவை நீங்கும். SHARE IT.
News October 7, 2025
அரசனாகும் சிலம்பரசன்

சிம்புவுடன் வெற்றிமாறன் முதன்முறையாக இணையும் புதிய படத்திற்கு ‘அரசன்’ என பெயரிடப்பட்டுள்ளது. வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.