News August 2, 2024

ஆடிப்பெருக்கன்று மாங்கல்யம் மாற்றும் நேரம்

image

தமிழகத்தில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. புதுமணப் பெண்கள், சுமங்கலிகள் இந்த நாளில், புதிய தாலி கயிறை தங்களது கணவன் கையால் கட்டிக்கொள்வது ஐதீகம். இந்த சம்பிரதாயத்தை, நாளை காலை 7.35-8.50 மணி, காலை 10.35-11.55 மணிக்குள் ஆறுகள், நதிகளில் நீராடிய பிறகு மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே நீராடியபின், அம்மனுக்கு பூஜை செய்தால் மாங்கல்ய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Similar News

News November 6, 2025

பெண்களின் குளியல் வீடியோ.. அரசுக்கு அன்புமணி கண்டனம்

image

ஓசூர் விடியல் விடுதியில் தங்கியுள்ள பெண்களின் தனியுரிமையை தமிழக அரசு பாதுகாக்க தவறிவிட்டதாக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் கைதான பெண்ணின் பின்னணியில் வேறு எவரேனும் இருக்கிறார்களா? என்பதை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று X-ல் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், பெண் தொழிலாளிகளின் காணொலி SM-ல் பரவியிருந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை தேவை என்றும் அன்புமணி கூறியுள்ளார்.

News November 6, 2025

‘AK65’ அஜித்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

image

AK65 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு லோகேஷ் சொன்ன கதைக்கு அஜித் ஓகே சொல்லியதாகவும், இதையடுத்து அவர் கதை விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரனுடனான AK64 படத்தை விரைவில் முடித்துவிட்டு, லோகியுடன் இணைந்து அஜித் பணியாற்ற உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்த காம்போவுக்கு யாரெல்லாம் வெயிட்டிங்?

News November 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 511 ▶குறள்: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். ▶பொருள்: ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.

error: Content is protected !!