News April 3, 2025
விடிய விடிய மழை கொட்டும்

தமிழகத்தில் இன்று இரவு தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News October 28, 2025
இமயமலையில் வெள்ள அபாயம்

கடந்த 14 ஆண்டுகளில், ஜம்மு – காஷ்மீரில் உள்ள இமயமலை பனிப்பாறை ஏரிகள் 50% அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வழித்துறை ஆணையம் சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், கீழ் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் கட்டடங்கள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
News October 28, 2025
பள்ளிக்கரணை விவகாரம்.. தமிழக அரசு விளக்கம்

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் கட்டுமானங்களுக்கு அனுமதி தரவில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அனுமதி வழங்கியதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றவை என்றும், சதுப்பு நில எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா இடங்களுக்கு மட்டுமே அலுவலர்கள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் TN அரசு கூறியுள்ளது. அங்கு ராம்சார் தலம் அமையும் இடம் இன்னும் புல எண்களுடன் வரையறுக்கப்படவில்லை என்று TN அரசு கூறியுள்ளது.
News October 28, 2025
BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவிப்பு

கனமழை முன்னெச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் பஸ் டிரைவர்களுக்கு போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, *காட்டாற்று ஓர சாலைகளில் பஸ்களை கவனமாக இயக்க வேண்டும். சாலைகளில் குறைவான தண்ணீர் இருந்தாலும் மாற்றுவழியை தேர்வு செய்யவும். *பஸ்களில் மழைநீர் ஒழுகுவது உள்ளிட்ட பிரச்னை இருந்தால் கிளை மேலாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். *கடலோர சாலை பஸ் டிரைவர்கள் கூடுதல் கவனமாக இருங்கள்.


