News April 3, 2025
விடிய விடிய மழை கொட்டும்

தமிழகத்தில் இன்று இரவு தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News March 10, 2026
விவசாயிகளுக்கு 80% மானியம் தரும் அரசு திட்டம்

விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் வாங்க SMAM Subsidy Scheme மூலம் மத்திய அரசு 40% – 80% வரை மானியம் வழங்குகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது www.agrimachinery.nic.in -ல் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் மாநில வேளாண்மைத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும் & சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும். நீங்கள் தகுதி பெற்றால் Mobile No.-க்கு SMS வரும். SHARE.
News March 10, 2026
அதிமுக கூட்டணியில் விஜய்? அண்ணாமலை கூறினார்

தவெகவுடன், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் உடனான கூட்டணி பேச்சு குறித்து நயினார் நாகேந்திரன் ஏற்கெனவே இல்லை என விளக்கம் அளித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னதாக, AP DCM பவன் கல்யாண் மூலமாக NDA தரப்பு விஜய்யுடன் பேசி வருவதாக நேற்று பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 10, 2026
ஓம் பிர்லாவுக்கு எதிரான தீர்மானம்.. காரசார விவாதம்

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் லோக்சபாவில் விவாதத்திற்கு வந்துள்ளது. அப்போது பேசிய காங்., MP கே.சி.வேணுகோபால், பல ஆண்டுகளாக துணை சபாநாயகரை அரசு நியமிக்கவில்லை; இது அரசமைப்பில் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான அவை நடவடிக்கைகளை தலைமை தாங்க ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


