News April 3, 2025
விடிய விடிய மழை கொட்டும்

தமிழகத்தில் இன்று இரவு தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News February 20, 2026
மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் வங்கியாளர்களுக்கான நான்காவது காலாண்டு மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்திற்கான 2026 -2027 ஆம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் முன்னிலையில் இன்று (பிப்.19) வெளியீட்டார்.
News February 19, 2026
திமுக ஆட்சியில் கடன் சதவீதம் குறைவு: தங்கம் தென்னரசு

திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் ₹5 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளதாக EPS தெரிவித்த கருத்துக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். கடன் விஷயத்தில் வாங்கிய தொகையை ஒப்பிடாமல் சதவீதத்தை தான் ஒப்பிட வேண்டும் என அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் 126% கடன் பெறப்பட்டதாக குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் 96% கடன் தான் பெறப்பட்டுள்ளது என்று கூறி, இது குறைவான கடன் சதவீதம் எனத் தெரிவித்தார்.
News February 19, 2026
PhonePe-ல் ₹5,000.. வெளியான புது அறிவிப்பு

UPI செயலியில் பணப் பரிவர்த்தனை செய்ய பயோமெட்ரிக் முறையை PhonePe அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, விரல்ரேகை, ஃபேஷியல் ரெகக்னிஷன் பயன்படுத்தி பணம் அனுப்பலாம், PIN தேவையில்லை. தற்போது ₹5,000 வரையான தொகைக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. இதை பெற PhonePe ஆப் புரஃபைலில் Manage Payments-ஐ கிளிக் செய்து Biometric Pay ஐகானை Enable செய்யவும். விரைவில் மற்ற நிறுவனங்களும் இதை கொண்டுவரும் எனத் தெரிகிறது.


