News April 3, 2025
விடிய விடிய மழை கொட்டும்

தமிழகத்தில் இன்று இரவு தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News January 14, 2026
TCS-ல் பணி நீக்கம் தொடர்கிறது!

AI-ன் தாக்கத்தால் கடந்த 6 மாதங்களில் 30,000 பேரை TCS நிறுவனம் பணி நீக்கம் செய்திருந்தது. இந்நிலையில் தங்களது நிறுவனத்தில் மறுசீரமைப்பு திட்டம் முடியவில்லை என்றும், தேவைப்பட்டால் 2026-லும் பணி நீக்கம் தொடரும் எனவும் TCS தெரிவித்துள்ளது. 3-வது காலாண்டின் முடிவிற்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. செப். காலாண்டில் 19,755 பேரையும், டிச. காலாண்டில் 11,151 பேரையும் TCS பணிநீக்கம் செய்திருந்தது.
News January 14, 2026
ஈரானியர்களே போராட்டத்தை கைவிட வேண்டாம்: டிரம்ப்

தொடர்ந்து போராடி நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுமாறு ஈரானியர்களுக்கு US அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஈரானில் போராடும் மக்களுக்கு உதவி தயாராக இருக்கிறது எனவும், மக்களை கொல்வதை நிறுத்தும் வரை ஈரானிய அதிகாரிகளை சந்திக்கவே மாட்டேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானில் வெடித்துள்ள போராட்டத்தால் இதுவரை சுமார் 2,000 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News January 14, 2026
விஜய்க்கு ஆதரவாக ராகுல் பேசியது ஏன்? காங்கிரஸ் பதில்!

ஜன நாயகன் படத்திற்கு ஆதரவாக ராகுலின் ட்விட்டுக்கும், கூட்டணிக்கும் தொடர்பில்லை என பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். பாஜக சென்சார் போர்டை ஒரு ஆயுதமாக மாற்றியுள்ளது என்றும், நாட்டின் ஒவ்வொரு அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் குரலை பாஜக அரசு ஒடுக்கி வருவதற்கு எதிராக தான் ராகுல் குரல் கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் 1960-ல் நடந்ததை பற்றி இப்போது பேசுவது தேவையற்றது எனவும் அவர் தெரிவித்தார்.


