News April 3, 2025
விடிய விடிய மழை கொட்டும்

தமிழகத்தில் இன்று இரவு தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News December 28, 2025
இந்திய அணியின் கேப்டனான வைபவ் சூர்யவன்ஷி!

U19 ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கிய இளம் சிங்கம் வைபவ் சூர்யவன்ஷிக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. SA-க்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட U19 ஒருநாள் தொடரில், 14 வயதான சூர்யவன்ஷி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கேப்டன் ஆயுஷ் மாத்ரே மற்றும் துணை கேப்டன் விஹான் மல்ஹோத்ரா, காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டனர். வரும் ஜன.3-ம் தேதி இந்த தொடர் தொடங்க உள்ளது.
News December 28, 2025
இது தான் நட்பு.. நண்பனின் நினைவு நாளில் நெகிழ்ச்சி!

’என் ப்ரெண்ட போல யாரு மச்சான்.. என் டிரெண்ட எல்லாம் மாற்றி வச்சான்’ என்ற பாடலின் வரியை உண்மையாக்கியுள்ளனர் மன்னார்குடி இளைஞர்கள். விக்னேஷ் என்பவர் கடந்த 2023-ல் விபத்தில் சிக்கி போதிய ரத்தம் கிடைக்காமல் உயிரிழந்தார். அவரது நினைவாக தங்களது நண்பன் போல் வேறு யாரும் ரத்தம் கிடைக்காமல் உயிரிழக்கக் கூடாது என 2-வது ஆண்டாக அவரது நண்பர்கள் ரத்த தானம் வழங்கியது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
News December 28, 2025
‘என் சாவுக்கு இவர்கள் தான் காரணம்’

உ.பி., ஃபரூக்காபாத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞரின் உடலில் இருந்து உருக்கமான கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், ’போலீஸ் அளித்த தொல்லைகளால் மனமுடைந்து, வாழ்வதற்கான எண்ணத்தை இழந்துவிட்டேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். பழைய வழக்கு ஒன்றிற்காக போலீஸ் அவரது வீட்டில் அடிக்கடி சோதனை செய்த நிலையில், அந்த இளைஞர் மன உளைச்சலில் விபரீத முடிவை எடுத்துள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல!


