News April 3, 2025
விடிய விடிய மழை கொட்டும்

தமிழகத்தில் இன்று இரவு தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News February 15, 2026
அனைத்து ரேஷன் கார்டுக்கும் தமிழக அரசு WARNING

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைரேகையை (Biometric) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாதவர்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று பிப்.25-க்குள் முடிக்குமாறு மாவட்ட வாரியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. கைரேகை பதிவு செய்யாதவர்களின் ரேஷன் அட்டை முடக்கப்படலாம். SHARE
News February 15, 2026
IND Vs PAK போட்டி.. வருண பகவான் வழிவிடுவாரா?

பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் டி20 WC லீக் போட்டி கொழும்புவில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ள நிலையில், கொழும்புவில் மாலை 6 மணி – இரவு 8 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மழையின் குறுக்கீடு இருந்தால் ஓவர்கள் குறைக்கப்படலாமே தவிர போட்டி ரத்தாக வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
News February 15, 2026
தேர்தலில் நிற்கப்போவதில்லை: மாணிக்கம் தாகூர்

இனி MP, MLA தேர்தல்களில் நிற்கப்போவதில்லை என்று மாணிக்கம் தாகூர் அதிரடியாக அறிவித்துள்ளார். தங்களால் தான் காங்., தேர்தலில் வென்றதாக திமுக கூறுவதாகவும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். முன்னதாக, திமுக தலைமை பேச்சுவார்த்தையை தொடங்க தாமதப்படுத்துகிறது என்றும், ஆட்சி அதிகாரத்தில் நிச்சயம் பங்கு வேண்டுமெனவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். தற்போது இவர் விருதுநகர் தொகுதி MP ஆக உள்ளார்.


