News April 3, 2025
விடிய விடிய மழை கொட்டும்

தமிழகத்தில் இன்று இரவு தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று MET அறிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News February 21, 2026
தேமுதிகவால் அதிமுக கூட்டணியில் நெருக்கடி

திமுக கூட்டணிக்கு தேமுதிக சென்றுவிட்ட நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாம். கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், அமமுகவும் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்க திட்டமிட்டுள்ளதாம். மேலும் சில கட்சிகளை கூட்டணிக்கு கொண்டுவர EPS முயற்சி எடுத்துவரும் நிலையில், இது புது நெருக்கடியை கொடுத்துள்ளது.
News February 21, 2026
தாய்மொழிக்காக உயிர்விட்ட மாணவர்கள்.. REWIND

1952-ல், டாக்காவில் உருதுவை தேசிய மொழியாக திணிக்கும் முடிவை பாக்., அரசு எடுத்தது. இதனால் வெகுண்டெழுந்த வங்க மக்களும் மொழிப் போராளிகளும் புரட்சியில் இறங்கினர். இதற்காக பிப்.21-ல் அமைதி பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இதில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகினர். இவர்களை நினைவுகூரவே 1999-ல் சர்வதேச தாய்மொழி தினத்தை UNESCO அங்கீகரித்தது. இது 2000 முதல் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
News February 21, 2026
FLASH: செங்கோட்டையனுக்கு தவெகவில் புதிய பொறுப்பு

தவெகவில் சட்டப்பேரவைத் தேர்தல் முதன்மை கண்காணிப்பாளர் பட்டியலை விஜய் வெளியிட்டுள்ளார். அதில், புஸ்ஸி ஆனந்திற்கு அடுத்ததாக செங்கோட்டையன் பெயர் இடம் பெற்றுள்ளது. அத்துடன், அவருடன் தவெகவில் இணைந்த EX MP சத்தியபாமாவுக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது, செங்கோட்டையன் தரப்புக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.


