News March 28, 2025
சபாநாயகரை கைநீட்டி பேசுவது மரபு அல்ல: ஸ்டாலின் காட்டம்

மதுரை உசிலம்பட்டி காவலர் முத்துக்குமரன் கொலை வழக்கு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை சட்டமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்க இபிஸ் வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார். தொடர்ந்து அதிமுகவினர் <<15912276>>அமளியில் <<>>ஈடுபட, சபாநாயகரை நோக்கி கைநீட்டி பேசுவது மரபல்ல என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Similar News
News March 31, 2025
பறவைகளுக்கு இதை பண்ணுங்க.. முதல்வரின் பாசக்கரம்…

கோடை காலம் வந்தால் பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாது. நாமே அவ்வளவு அவதிப்படும் போது பறவைகள் என்ன செய்யும். இந்நிலையில், கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். கையில் செல்லப் பிராணியுடன் பறவைகளுக்கு உணவளிக்கும் புகைப்படங்களையும் CM பகிர்ந்துள்ளார்
News March 31, 2025
46 சுங்கச்சாவடிகளில் நாளை முதல் சுங்கக் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் நாளை முதல் 46 சுங்கச்சாவடிகளில் 2.5%- 2.7% வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இதில் 8 சுங்கச்சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளவை. எஞ்சிய 38 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளவை. புதிய கட்டண உயர்வின்படி, கார்களுக்கான கட்டணம் ரூ.5, பஸ்கள் மற்றும் பிற வாகனங்களுக்கான கட்டணம் ரூ.15- ரூ.30 வரை அதிகரிக்கிறது. நெமிலி, சின்னசமுத்திரம் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படாது.
News March 31, 2025
காய்கறிகள் விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக சரிந்துள்ளது. 1 கிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.13 வரை விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் விலை ரூ.14 முதல் ரூ.20 வரையிலும், சாம்பார் வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டைக்கோஸ் 1 கிலோ ரூ.5க்கும், பீட்ரூட், புடலங்காய், முருங்கைக்காய் கிலோ ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகிறது.