News April 17, 2024
அனைத்து ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுவது சாத்தியமற்றது

விவிபாட் இயந்திரத்தின் அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது சாத்தியமற்றது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. காகித வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி ADR அமைப்பு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், மனித தலையீடு இல்லாத இயந்திரம் சரியான முடிவுகளை கொடுக்கும் எனக் கருத்து தெரிவித்து இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தது.
Similar News
News August 15, 2025
ஆரவாரத்துடன் வெளியான வார் 2வுக்கு பெரும் அடி

ரஜினியின் கூலியுடன் களமிறங்கிய ‘வார் – 2’ படம் முதல் நாளில் ₹52.5 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘வார் 2’ அதன் முதல் பாக வசூலைக்(₹53 கோடி) கூட தொடவில்லை. படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் குறையும் என கூறப்படுகிறது. அதேவேளையில், ரஜினியின் <<17409522>>‘கூலி’, ₹140 கோடி<<>> வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News August 15, 2025
நான் ஒரு சுவர் போல நேராக நிற்பேன்: PM உறுதி

விவசாயிகள், மீனவர்கள் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது என அமெரிக்க வரிவிதிப்பை PM மோடி எதிர்த்துள்ளார். நான் சுவர் போல் நேராக நிற்பேன், வளைந்து கொடுக்க மாட்டேன் என டிரம்ப்பை அவர் மறைமுகமாக சாடியுள்ளார். மேலும், நமது தேவைகளுக்காக பிற நாடுகளை சார்ந்திருப்பது என்பது அழிவுக்கான சான்று எனவும், தற்சார்பே நமது தேச நலனை காக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 15, 2025
மானியத்துடன் கடன் வேண்டுமா?.. இதை பண்ணுங்க

புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் மையம் (District Industries Centre – DIC) உருவாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேனேஜரை அணுகி தொழில் தொடங்க வங்கிகள் மூலம் மானியத்துடன் கடன் பெறலாம். நாம் தொடங்கும் தொழிலை பொறுத்து ₹10 லட்சம் முதல் அதிகபட்சமாக ₹5 கோடி வரை கடன் பெறலாம். உதாரணமாக, ₹10 லட்சம் கடன் பெற்றால் அதில் மானியமாக ₹3.5 லட்சத்தை அரசே செலுத்தும். SHARE IT