News March 9, 2025
மிக கனமழை வெளுக்கப் போகிறது

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 11ஆம் தேதி தமிழகத்தில் பரவலாக மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
Similar News
News July 11, 2025
உங்களை தவிர யாருமில்லை.. அன்புமணி உருக்கம்

டாக்டர் ராமதாஸுடன் மோதல் போக்கு நிலவும் நிலையில், பாமகவினருக்கு அன்புமணி உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், பாமகவினருக்காக தான் இருப்பதாகவும், கட்சித் தொண்டர்களைத் தவிர தனக்கு வேறு எவருமில்லை என தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம் என்றும், இது உறுதி என்றும் கட்சியினரை அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
News July 11, 2025
3 தீவிரவாதிகள் சிக்கியது எப்படி? டிஜிபி விளக்கம்

பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளை TN போலீசார் கைது செய்துள்ளனர். 58 பேரை பலி கொண்ட கோவை குண்டுவெடிப்பு வழக்கு மற்றும் பெங்களூரு குண்டுவெடிப்பில் தீவிரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி, சாதிக்கை TN ATS போலீசார் 30 ஆண்டாக தேடி வந்தனர். அவர்கள் ஆந்திரா, கர்நாடகாவில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்து போலீசார் கைது செய்திருப்பதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
News July 11, 2025
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிரோடு எழுந்த அதிசயம்

இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை, 12 மணிநேரத்துக்கு பின் உயிரோடு எழுந்தால் எப்படி இருக்கும்? மகாராஷ்டிராவில், ஒரு பெண்ணுக்கு 7-வது மாதமே குழந்தை பிறந்தது. பிரசவம் நடந்த ஹாஸ்பிடலில் குழந்தையை இரவு முழுவதும் ICU-வில் வைத்து கண்காணித்த டாக்டர்கள், இறந்துவிட்டதாக அறிவித்தனர். குழந்தையை புதைக்க மாஸ்க்கை விலக்கிய போது, அசைவு தெரிந்தது. உடனே குழந்தையை வேறொரு ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.