News February 13, 2025
பாஜகவுடன் கைகோர்ப்பதே நல்லது: ஓபிஎஸ்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_122024/1733393715617_1241-normal-WIFI.webp)
அதிமுகவில் பிரிந்திருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என கருத்து தெரிவித்துள்ளார் ஓபிஎஸ். கட்சியின் 50 ஆண்டுகால விதியை மீறி திருத்தம் செய்ததே அதிமுகவின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடலாம் என்ற தீர்ப்பு வருவதற்கு காரணம் என சாடியுள்ளார். மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும் வெற்றிக்கு வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 13, 2025
டீ விற்றால் தினசரி ரூ.7,000 வருமானம்: எங்கே தெரியுமா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739434028180_1173-normal-WIFI.webp)
உ.பி. கும்பமேளாவில் தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அப்படி வரும் பக்தர்களிடம் டீ விற்று, நாளொன்றுக்கு ₹7,000 வருமானம் ஈட்டுவதாக இன்ஸ்டா பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் மூலதனச் செலவு ₹2,000 போக, லாபம் மட்டும் ₹5,000 நிற்பதாக அவர் கூறியுள்ளார். இதன்படி பார்த்தால், ஒரு மாதத்தில் அவர் ₹1.50 லட்சம் வருமானம் ஈட்டுவார். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என சும்மாவா சொன்னார்கள்.
News February 13, 2025
திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739441290858_1031-normal-WIFI.webp)
திமுகவில் விரைவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. சில மாவட்டங்களைப் பிரித்து, புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும், மந்தமாக செயல்படும் மாவட்டச் செயலாளர்களை நீக்கவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கட்சியை பலப்படுத்தவே இந்த மாற்றம் எனவும் தெரிகிறது. திமுகவில் தற்போது 72 மா.செக்கள் உள்ளனர்.
News February 13, 2025
உலகில் 2 முறை பிறந்த அதிசய குழந்தை!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739439655453_1231-normal-WIFI.webp)
அமெரிக்காவின் டெக்ஸாஸில், 16 வார கர்ப்பிணியான Margaret Hawkins Boemer என்பவரின் வயிற்றிலிருந்த குழந்தைக்கு முதுகுத் தண்டில் tumor இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, தாயின் வயிற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சையளித்து கட்டி அகற்றப்பட்டது. பின்னர், 20 நிமிடங்கள் கழித்து, குழந்தையை வயிற்றில் வைத்து, தாயின் Womb தைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து குழந்தை மீண்டும் பிறந்தது.