News August 26, 2024
கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாட உகந்த நேரம்

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட உகந்த நேரம் எது என புராணத்தில் கூறப்பட்டிருப்பதை இங்கு பார்க்கலாம். கிருஷ்ணர் இரவு நேரத்தில் பிறந்தார் என்பதால், பகலில் கொண்டாடுவதை விட இரவு 8-9 மணிக்குள் காெண்டாடுவதே சிறப்பு என்று புராணம் கூறுகிறது. பகலில் விரதமிருந்து மாக்கோலம் இட்டு, கிருஷ்ணரின் கால் பாதத்தை வாசலில் இருந்து பூஜை அறை வரை வரைந்து வழிபடுவது சிறப்பு என புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
சேலம் அருகே மயில் மோதியதில் பெண் பலி!

சேலம் அருகே நாவப்பாளையம் பகுதியில் பிரபுதேவா மற்றும் மனைவி கோகிலா நேற்று மோட்டார் சைக்கிளில் வீட்டு திரும்பும்போது கல்பாரப்பட்டி அருகே ஒரு மயில் திடீரென விழுந்தது. மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். கோகிலா பலத்த பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். பிரபுதேவா லேசான காயத்துடன் உயிர் மீட்டார். சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 1, 2025
ஹீரோ ரோல் போர் அடித்து விட்டது: மம்முட்டி

பல டாப் ஹீரோக்கள் எத்தனை வயதானாலும் சரி, ஹீரோவாகவே நடிப்பர். ஆனால் மம்முட்டி சமீபமாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்தி வருகிறார். ‘களம் காவல்’ படத்தில் வில்லனாக நடிக்கும் அவர், ‘ஹீரோவாக நடிப்பதில் உற்சாகமில்லை, சீனியர், வில்லன் பாத்திரங்களில் தான் நடிப்பு திறமையை காட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார். ஸ்டார் இமேஜை விட நடிகராக இருப்பதே பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 1, 2025
BREAKING: 10 மாவட்ட பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

டிட்வா புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை தொடரும். எனவே, பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.


