News March 1, 2025
இவர்கள் ஆட்சிக்கு வருவது பேராபத்து: ஜவாஹிருல்லா

அரசியலையும் சிலர் சினிமாவை போல் நினைப்பதாக நடிகர் விஜயை மறைமுகமாக ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். பாசிசமா, பாயாசமா என்று சிலர் சிறுபிள்ளைத்தனமாக பேசுவதாகவும், அவர்கள் ஆட்சிக்கு வருவது தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்றும் சாடியுள்ளார். சினிமாவை போல் அரசியல் இருக்காது என்றும், பேச்சை கேட்பவர்கள் எல்லாம் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 1, 2025
பெண்ணின் பிறப்புறுப்பில் பாட்டில்.. வழக்கில் திருப்பம்

உ.பி.யில் கடந்த 24ம் தேதி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சிலர் பிறப்புறுப்பில் பாட்டிலை புகுத்தியதாகப் பெண் அளித்த புகாரில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண், இளைஞர் ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்த நிலையில், இளைஞரையும், அவரது நண்பர்களையும் பழிவாங்க நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இளைஞர்களே உஷார்..
News March 1, 2025
RIP மைக்ரோசாப்ட் ஸ்கைப்

புகழ்பெற்ற வீடியோ காலிங் சாப்ட்வேரான ஸ்கைப்பை மே 2025உடன் நிறுத்தப்போவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மாறாக, Microsoft Teams ப்ரோமோட் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. 2003ஆம் ஆண்டு இரு இளைஞர்களால் தொடங்கப்பட்ட ஸ்கைப் சாப்ட்வேர், தொலைத்தொடர்பில் புதிய புரட்சி செய்தது. பின்னர், 2011ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் அதனை வாங்கி புதுப்பித்தது. இந்நிலையில், பரிணாம வளர்ச்சியால் ஸ்கைப் மூடுவிழா காண்கிறது.
News March 1, 2025
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ராயப்பேட்டை அரசுப் பள்ளியில் மாணவச் சேர்க்கையை தொடங்கிய அவர், தனது பிறந்தநாளையும் அங்குள்ள மாணவர்களுடன் கொண்டாடினார். பள்ளிகளில் புதிதாக சேர வந்த மாணவர்களுக்கு மலர் மாலைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கி முதல்வர் குதூகலித்தார்.