News November 30, 2024

ஆரம்பமாயிருச்சு.. கொட்ட தொடங்கிய அதிகனமழை!

image

ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கப் போகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரம் – காரைக்கால் இடையேதான் புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புயல் நெருங்கி வருவதன் அறிகுறியாக மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் அதிகனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது.

Similar News

News April 26, 2025

உல்லாசத்துக்கு இடையூறு: பெண் குழந்தை கொலை

image

நெல்லையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய், 3 காதலர்களை போலீஸ் கைது செய்தது. மகாதேவன்குளத்தை சேர்ந்த பிருந்தாவுக்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை இருந்தது. பிருந்தாவுடன், லிங்கசெல்வன், முத்துசுடர், பெஞ்சமின் உல்லாசமாக இருந்தபோது குழந்தை தண்ணீர் கேட்கவே, அடித்து கொலை செய்து, கீழே விழுந்து இறந்ததாக பிருந்தா, காதலர்கள் நாடகமாடியது தெரிந்ததால் கைது செய்யப்பட்டனர்.

News April 26, 2025

ஹாலிவுட் நடிகை மரணம்… காரணம் தெரிந்தது

image

ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் (63) மறைவுக்கு புற்றுநோயே காரணம் என்று அவரின் மகள் தெரிவித்துள்ளார். த்ரில்லர் படங்களான Friday the 13th Part VII: The New Blood, “House II: The Second Story” உள்ளிட்டவற்றில் நடித்தவர் லார் பார்க் லிங்கன். அண்மையில் அவர் மரணம் அடைந்தார். அதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், மார்பக புற்றுநோய் பாதிப்பே காரணம் என்று மகள் பைபர் லிங்கன் கூறியுள்ளார்.

News April 26, 2025

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. அதேபோல் மயிலாடுதுறை, கடலூர், அரியலூரிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD கணித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கீழே கமெண்ட் பண்ணுங்கள்.

error: Content is protected !!