News March 17, 2024
காஞ்சிபுரத்தில் அமலுக்கு வந்தாச்சு!

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச் 16) மாலை முதல் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள அரசு விளம்பரங்கள், பலகைகள் மற்றும் அரசு சாதனை திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை தேர்தல் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News December 21, 2025
காஞ்சி: கஞ்சா விற்பனையில் 4பேர் அதிரடி கைது!

காஞ்சிபுரம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வையாவூர் சாலையில் நடத்திய அதிரடி சோதனையில், வண்டலூர் மற்றும் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களைக் கைது செய்தனர். வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட 5 கிலோ கஞ்சா அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன், விக்னேஸ்வரன், பாஸ்கரன் மற்றும் பிரசன்னா ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 21, 2025
காஞ்சி: வேன் மோதி வாலிபர் பலி!

உத்திரமேரூர் அருகே குப்பையநல்லூரைச் சேர்ந்த அமல்ராஜ் (35), நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தனியார் பள்ளி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. பட்டஞ்சேரி பகுதியில் நடந்த இவ்விபத்தில் காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 21, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.21) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


