News November 18, 2025
IT ரீஃபண்ட் வருவதில் தாமதம் ஏன்?

வருமான கணக்கு தாக்கலில், பலர் தவறான கழிவுகளை தாக்கல் செய்துள்ளதால், அதை ஆராய வேண்டியுள்ளதாக CBDT தலைவர் ரவி அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். அதிலும், சில கணக்குகளில் கிளெய்ம் தொகை மிக அதிகமாக உள்ளதாக சிஸ்டம் எச்சரித்துள்ளது. இதனால் ரீஃபண்ட் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. டிசம்பர் இறுதிக்குள் பணம் செலுத்தப்பட்டு விடும். குறைந்த தொகை கிளெய்ம்கள் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News November 18, 2025
மாவோயிஸ்ட் முக்கிய தளபதி என்கவுன்ட்டர்

ஆந்திராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில், 6 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இதில், மாவோயிஸ்ட்களின் முக்கிய தளபதி ஹிட்மா, அவரது மனைவி உயிரிழந்தனர். பல மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த ஹிட்மா, 26 தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர். ஆயுதங்களை கையாள்வது, பழுதுபார்ப்பதில் கை தேர்ந்தவரான இவரை பற்றி தகவல் தெரிவித்தால், ₹50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
News November 18, 2025
மாவோயிஸ்ட் முக்கிய தளபதி என்கவுன்ட்டர்

ஆந்திராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில், 6 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இதில், மாவோயிஸ்ட்களின் முக்கிய தளபதி ஹிட்மா, அவரது மனைவி உயிரிழந்தனர். பல மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த ஹிட்மா, 26 தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர். ஆயுதங்களை கையாள்வது, பழுதுபார்ப்பதில் கை தேர்ந்தவரான இவரை பற்றி தகவல் தெரிவித்தால், ₹50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
News November 18, 2025
SIR-க்கு எதிராக SC-யில் கேரள அரசு வழக்கு

SIR நடைமுறைக்கு எதிராக கேரள அரசு சார்பில் SC-யில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்கான பணியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியும் ஒரே நேரத்தில் வருகிறது. இதனால், பணியாளர்கள் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாமல், இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு நேரம் இருப்பதால், SIR நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.


