News March 18, 2025
இஸ்ரேல் பயங்கர தாக்குதல்: 100 பேர் பலி

காசா, லெபனான், சிரியா பகுதிகளில் இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர். பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க மறுத்ததாகக் கூறி இஸ்ரேல் இத்தாக்குதல்களை நடத்தியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாக, ஹமாஸ் அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஜனவரியில் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், தற்போது பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 18, 2025
தீவிரவாதிகளுக்கு புகலிடம்: குமுறும் பாக்., மக்கள்

பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பாவின் அபு சிந்தி கொல்லப்பட்டது, மும்பை தாக்குதல் சதிகாரன் ஹபீஸ் சையதுக்கு குறிவைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பிரபல யூடியூபர் சுஹெய்ப் நடத்திய விவாதத்தில் கலந்து கொண்ட மக்கள், நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சையத் போன்ற தீவிரவாதிகளுக்கு ஏன் புகலிடம் தர வேண்டும். இந்தியாவை போல் ஏன் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை என கேள்வி எழுப்பினர்.
News March 18, 2025
அமேசான், ஃபிளிப்கார்ட் சேமிப்புக் கிடங்குகளில் ரெய்டு

அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகளில் இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) ரெய்டு நடத்தியுள்ளது. தரம் குறைந்த பொருள்கள் விற்பனை செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்டையில், நாடு முழுவதும் உள்ள கிடங்குகளில் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக BIS அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எலக்ட்ரிக் பொருள்கள், வாட்டர் பாட்டில்கள் என 100க்கும் அதிகமான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
News March 18, 2025
உலகை உலுக்கும் புகைப்படங்கள்.. கண்ணீர்

காசாவில் இஸ்ரேல் நடத்திய கோரத் தாக்குதலில் இதுவரை 300 பேர் இறந்துள்ளனர். எந்த பக்கம் திரும்பினாலும் சிறுவர்கள், பெண்கள் என அப்பாவி மக்களின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறும் சத்தம் நெஞ்சை ரணமாக்குகிறது. இதுதொடர்பான <