News June 18, 2024
போர் கேபினட்டை கலைத்த இஸ்ரேல்

காசா மீதான போர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க அமைக்கப்பட்ட போர் கேபினட்டை இஸ்ரேல் அரசு கலைத்துள்ளது. இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் பென்னி கான்ட்ஸ் & முன்னாள் ஜெனரல் ஈசன்கோட் ஆகியோர் கேபினட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அதனை கலைக்கும் முடிவை நெதன்யாகு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் & ஹமாஸ் இடையேயான போர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 24, 2026
இந்தியா சவால்களுக்கு அஞ்சாது: PM மோடி

இந்தியா சவால்களுக்கு அஞ்சாமல் அவற்றை எதிர்கொள்ளும் என்று PM மோடி கூறியுள்ளார். போரின் தாக்கம் உலகின் அனைத்து துறைகளையும் பாதித்துள்ளதாகவும், போர் சூழல்களை நாம் கையாளும் விதத்தையே உலக நாடுகள் பின்பற்றுவதாகவும் தெரிவித்தார். எப்போதும் அமைதி பேச்சுவார்த்தைகளை வரவேற்கும் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் இந்தியா நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
News March 24, 2026
நெருக்கடி.. கடந்த கால சிரமங்கள் மீண்டும் ஏற்படுமா?

போர் நெருக்கடியை கோவிட் போல எதிர்கொள்ள வேண்டும் என்ற PM மோடியின் கருத்து கவலையளிக்கிறது. இதனால், மீண்டும் கடினமான காலங்கள் ஏற்படுமா என்ற கேள்வி மக்களை வாட்டி வதைக்கிறது. போர் நீடித்து, வரும் நாட்களில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டால் என்னவாகும்? இறக்குமதி & ஏற்றுமதி தடைப்பட்டால் என்னவாகும்? இந்த தாக்கம் விலைவாசி, வேலைவாய்ப்புகளையும் பாதித்தால் நிலைமை என்னவாகும்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
News March 24, 2026
எரிசக்தி இறக்குமதியை விரிவுபடுத்தியுள்ளோம்: PM

நாட்டில் எரிசக்தி விநியோகம் சீராக இருப்பதாக PM மோடி தெரிவித்தார். இந்தியா தனது LPG தேவைகளில் கிட்டத்தட்ட 60%-ஐ இறக்குமதி செய்வதாகவும், கடந்த 11 ஆண்டுகளில் எரிசக்தி இறக்குமதியை 27 நாடுகளில் இருந்து 41 நாடுகளாக விரிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அவசர காலத்துக்கான பெட்ரோலிய இருப்பு 53 லட்சம் மெட்ரிக் டன் உள்ளதாகவும், அவற்றை 65 லட்சமாக விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


