News January 21, 2025
டவர் இல்லையா..? கவலையை விடுங்க..!

ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இனி எந்த டெலிகாம் நிறுவனத்தின் டவர்களில் இருந்தும் சேவைகளை பெறலாம். நிலையான கனெக்ஷனுக்காக இந்த புதிய வசதியை தொலைத்தொடர்புத் துறை (DoT) நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. இனி சிக்னல் பிரச்னை வராது என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த புதிய அறிவிப்பின் மூலம், மேற்கூறிய 3 நிறுவன வாடிக்கையாளர்கள் இனி தடையின்றி 4ஜி சேவைகளை பெறலாம்.
Similar News
News March 10, 2026
ஐரோப்பிய நாடுகளுக்கு உதவத் தயார்: ரஷ்யா

போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க தயாராக இருப்பதாக புடின் அறிவித்துள்ளார். அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நீண்டகால ஒத்துழைப்பை வழங்கினால் எண்ணெய் அனுப்புவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்க அமெரிக்கா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
News March 10, 2026
கேஸ் புக்கிங் செய்ய இனி 25 நாள்கள் காத்திருக்கணும்

நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பதுக்கல் & கள்ளச்சந்தையை தடுக்க, 2 சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 25 நாள்கள் இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு Commercial கேஸ் சப்ளையில் முன்னுரிமை அளிக்கவும், ஹோட்டல்கள், பிற தொழிற்சாலைகளுக்கான சப்ளையை மதிப்பாய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
News March 10, 2026
BREAKING: செந்தில் பாலாஜி பரபரப்பு அறிவிப்பு

கரூர் வழக்கு தொடர்பாக வரும் 17-ம் தேதி CBI அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாக செந்தில் பாலாஜி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அப்போது, CBI எழுப்பும் கேள்விகளுக்கு தான் உரிய விளக்கத்தை அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று, CBI அனுப்பிய சம்மனை அவர் ஏற்க மறுத்ததால், E-மெயில் மூலமாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தனது X பக்கத்தில் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.


