News March 21, 2024
ஐஎஸ்ஐஎஸ் இந்தியா தலைவர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும், அசாமிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், துப்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதுங்கி இருந்த பரூக்கி, ரெஹான் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Similar News
News October 10, 2025
CM ஸ்டாலினுக்கு திறமை இல்லை: EPS

திமுக ஆட்சியில், குடிநீரில் மலம் கலக்கும் கொடுமையான செயல் நடப்பதாக EPS விமர்சனம் செய்துள்ளார். கையாலாகாத அரசு ஆட்சி செய்வதால் தான் வேங்கைவயலில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய EPS, அந்த பிரச்னை தீர்வதற்குள் தற்போது சோழவந்தான் பகுதியில் உள்ள நீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். இவற்றையெல்லாம் தீர்க்க கூடிய திறமை CM-க்கு திறமை இல்லை என்றும் அவர் சாடினார்.
News October 10, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 10, புரட்டாசி 24 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 01:45 AM – 2:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை
News October 10, 2025
Cinema Roundup: ரீ-ரிலீசாகும் அஞ்சான்

சூர்யாவின் ‘அஞ்சான்’ படம் விரைவில் ரீ-ரிலீசாகும் என அறிவிப்பு. *கிஷென் தாஸின் ‘ஆரோமலே’ படம் நவம்பர் 7-ம் தேதி வெளியாகிறது. *விஜய் சேதுபதியின் அடுத்த படத்திற்கு தேசிய விருது வென்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்கவுள்ளார். *ஜி.வி.பிரகாஷின் ‘மெண்டல் மனதில்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. *மகேஷ் பாபுவின் SSMB29 அதிகாரப்பூர்வ டைட்டில் நவ.16-ல் வெளியாகும் என தகவல்.