News March 21, 2024
ஐஎஸ்ஐஎஸ் இந்தியா தலைவர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும், அசாமிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், துப்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதுங்கி இருந்த பரூக்கி, ரெஹான் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Similar News
News October 14, 2025
BREAKING: சீமான் வீட்டில் பரபரப்பு

சென்னை, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. DGP அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் வந்ததை அடுத்து, சீமான் வீட்டில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அண்மையில், CM ஸ்டாலின், EPS, விஜய் உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News October 14, 2025
Recipe: காஜு கத்லி செய்யலாம் வாங்க!

*முந்திரி பருப்பை 6 மணிநேரம் நீரில் ஊறவைத்து, நைஸாக அரைக்கவும் *வாணலியில் நெய்விட்டு, முந்திரி மாவை கொட்டி நன்கு கிளறவும் (நிறம் மாறக்கூடாது) *அதில், குங்குமப்பூ, ஏலக்காய் பொடி, சர்க்கரை பாகு சேர்க்கவும் *சப்பாத்தி மாவு பதத்திற்கு இந்த கலவை வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கிவிடவும் *ஆறியவுடன் டைமண்ட் வடிவில் அதை துண்டுகளாக வெட்டினால் சுவையான காஜு கத்லி ரெடி. SHARE IT.
News October 14, 2025
கரூர் விவகாரத்தை கையில் எடுக்கும் எதிர்க்கட்சிகள்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், 17-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இக்கூட்டத்தில் கிட்னி திருட்டு, கரூர் துயரம், குழந்தைகளின் உயிரை பறித்த இருமல் மருந்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரிப்பு, கொலை குற்றங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க திட்டமிட்டுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்க ஆளும் திமுகவும் தயாராகி வருகிறது