News March 21, 2024
ஐஎஸ்ஐஎஸ் இந்தியா தலைவர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும், அசாமிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், துப்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதுங்கி இருந்த பரூக்கி, ரெஹான் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Similar News
News November 5, 2025
BREAKING: தேர்தல் கூட்டணி.. இபிஎஸ் புதிய அறிவிப்பு

தேர்தல் கூட்டணி பற்றி எங்கும் பேச வேண்டாம் என மாவட்ட செயலாளர்களுக்கு EPS அறிவுறுத்தியுள்ளார். கூட்டணி குறித்த கவலை உங்களுக்கு வேண்டாம் எனவும் அதனை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக, பூத் கமிட்டி பணிகளை சரியாக கவனித்தாலே வெற்றி உறுதி எனவும் நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார். அதிமுக நிர்வாகிகளின் கூட்டணி அழைப்பை தவெக நிராகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
News November 5, 2025
இவைதான் இந்தியாவின் விலை உயர்ந்த விஷயங்கள்!

பொதுவாக உலகளவில் பிராண்டட் பொருள்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை அவை சற்று மாறுபடுகின்றன. இங்கு கழுதைப்பாலில் தொடங்கி தேயிலை வரை, அதன் சிறப்புத் தன்மை காரணமாக அதிக விலைக்கு விற்பனையாகின்றன. அந்தவகையில், இந்தியாவில் அதிகவிலை கொண்ட பொருள்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இதில் உங்களை ஆச்சரியப்படுத்தியதை கமெண்ட் பண்ணுங்க.
News November 5, 2025
காங். தோல்வியை மறைக்க ராகுல் முயற்சி: கிரண் ரிஜிஜூ

<<18205262>>ஹரியானா வாக்கு திருட்டு<<>> குறித்து ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார். ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்களே வாக்காளர் பட்டியல் தொடர்பாக எந்த புகாரும் அளிக்கவில்லை எனவும், காங்கிரஸின் தோல்விகளை மறைக்க ராகுல் பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், ஜென் Z வாக்காளர்களை ராகுல் தூண்டிவிடுவதாகவும் சாடியுள்ளார்.


