News March 21, 2024

ஐஎஸ்ஐஎஸ் இந்தியா தலைவர் கைது

image

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும், அசாமிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், துப்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதுங்கி இருந்த பரூக்கி, ரெஹான் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Similar News

News November 3, 2025

தினமும் இதை சாப்பிட்டால் பார்லரே போக வேண்டாம்

image

பெண்களும் சரி, ஆண்களும் சரி முகத்தை பளபளப்பாக்க பார்லருக்கு சென்று காசை வாரி இறைக்கின்றனர். ஆனால் வீட்டிலேயே இருக்கும் நெய்யின் மகத்துவம் அவர்களுக்கு தெரிவதில்லை. முகத்தை பளபளப்பாக்க தினமும் உணவில் நெய்யை சேர்த்துக்கொள்ளுங்கள். இது முகத்தை பளபளப்பாக்குவதோடு, சருமம் வறண்டு போகாமல் பாதுகாப்பது, Acne வராமல் தடுப்பது போன்ற விஷயங்களை செய்கிறதாம். இயற்கையின் அருமையை அனைவரும் அறிந்துகொள்ள SHARE THIS.

News November 3, 2025

நாளை பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

image

பொதுத்தேர்வு தேதி எப்போது வெளியிடப்படும் என 10, +2 மாணவர்கள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி நாளை வெளியாகிறது. பொதுத்தேர்வு தேதியை அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை காலை 10.30 மணிக்கு அறிவிக்க இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 10, +2, கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியை அவர் அறிவிக்க உள்ளார். என்ன மாணவர்களே, ரெடியா!

News November 3, 2025

Worldcup நாயகிகளுக்கு வைர நெக்லஸ் பரிசு

image

மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினருக்கு, குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், MP-யுமான கோவிந்த் தோலாகியா சிறப்பு பரிசுகளை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் BCCI-க்கு எழுதிய கடிதத்தில், இந்திய அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும் வைர நெக்லஸ்களை பரிசளிக்கவும், அவர்களின் வீடுகளில் சோலார் பேனல்களை பொருத்தவும் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!