News March 21, 2024

ஐஎஸ்ஐஎஸ் இந்தியா தலைவர் கைது

image

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும், அசாமிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், துப்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதுங்கி இருந்த பரூக்கி, ரெஹான் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Similar News

News November 4, 2025

இப்படி பண்ணா உங்க போனும் வெடிக்கலாம்.. உஷாரா இருங்க!

image

ரோட்டில், ஆபீஸில் என பல நேரங்களில், திடீரென போன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு பல காரணிகள் இருந்தாலும், முக்கிய காரணமாக, போனைக் கூடுதல் நேரம் சார்ஜில் போட்டு வைப்பதுதான் என்று கூறப்படுகிறது. அதிக நேரம் சார்ஜாகும் போது, பேட்டரி அதிகமாக சூடாகி விடுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் போன் வெடிக்கும் அபாயம் உண்டு. எனவே, போன் சார்ஜில் இருந்தாலும், கவனத்துடன் இருங்கள். SHARE IT

News November 4, 2025

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 குறைந்தது

image

தங்கம் விலை 22 கேரட் கிராமுக்கு ₹100, சவரனுக்கு ₹800 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,250-க்கும், சவரன் ₹90,000-க்கும் விற்பனையாகிறது. நவம்பர் மாதம் தொடங்கியது முதலே ஏறுமுகத்தில் இருந்த தங்கம்<<18192239>> சர்வதேச சந்தையில்<<>> ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மீண்டும் மளமளவென சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 4, 2025

தனித்தொகுதியில் தனி கவனம் செலுத்தும் திமுக!

image

தனித் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு இதர சாதியினர் ஓட்டுப்போடுவதில்லை என்ற பேச்சு உள்ளது. அதனால்தான், கடந்த தேர்தல்களில் கூட்டணி வலுவாக இருந்தும், தனித் தொகுதிகளில் திமுகவை விட அதிமுக அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்றது. குறிப்பாக, பொன்னேரி, வாசுதேவநல்லூர், அவிநாசி உள்ளிட்ட பல தனித் தொகுதிகளில் நீண்டகாலமாக DMK போட்டியிடவில்லை. தற்போது தனித் தொகுதிகளில் கவனம் செலுத்த திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாம்.

error: Content is protected !!