News March 21, 2024
ஐஎஸ்ஐஎஸ் இந்தியா தலைவர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும், அசாமிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், துப்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதுங்கி இருந்த பரூக்கி, ரெஹான் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Similar News
News November 3, 2025
இந்திய மகளிர் அணிக்கு விராட் கோலி வாழ்த்து

மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி பல தலைமுறைகளுக்கு ஊக்கமாக அமையும் என்றும், உங்களுடைய அச்சமற்ற ஆட்டத்தாலும், நம்பிக்கையாலும் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட செய்திருக்கிறீர்கள் எனவும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார். நீங்கள் எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டு, இந்த தருணத்தை முழுமையாக கொண்டாடுங்கள் என வாழ்த்தியுள்ளார்.
News November 3, 2025
ஜிம்முக்கு போகணுமா? இதெல்லாம் தேவைப்படும்

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு நீரேற்றம், சுகாதாரம், உற்சாகம் போன்றவை தேவைப்படும். நீங்கள் ஜிம்முக்கு போக போறீங்களா? உங்களுக்கு சில அத்தியாவசிய பொருட்கள் அவசியம். அவை என்னென்ன பொருட்கள் தேவை என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த டிப்ஸை, கமெண்ட்ல சொல்லுங்க.
News November 3, 2025
நவம்பர் 3: வரலாற்றில் இன்று

*1838 – பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. *1933 – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் பிறந்தநாள். *1957 – லைக்கா என்னும் நாயை சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பியது. *1963 – ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். *2014 – உலக வர்த்தக மையம் ஒன்று திறக்கப்பட்டது.


