News March 21, 2024
ஐஎஸ்ஐஎஸ் இந்தியா தலைவர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும், அசாமிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், துப்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதுங்கி இருந்த பரூக்கி, ரெஹான் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Similar News
News November 22, 2025
PM-ஐ சந்திக்க தயாராக உள்ளேன்: CM ஸ்டாலின்

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக PM-ஐ எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக உள்ளேன் என CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மெட்ரோ ரயில் நிராகரிக்கப்பட்டிருப்பதால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறிய அவர், இதில் PM தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அத்துடன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி எனவும், மத்திய அரசு இதில் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
News November 22, 2025
ரஜினி படத்துக்கு புது இயக்குநரை பிடித்தாரா கமல்?

ரஜினி படத்துக்கு கதை சொல்ல புது இயக்குநர்களும் முன்வரலாம் என கமல் கூறியிருந்தார். இந்நிலையில், மலையாள இயக்குநர் ஒருவர் RKFI அலுவலகத்தை அணுகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த புது இயக்குநரின் கதையோடு சேர்த்து மொத்தம் 5 கதைகள் வரிசையில் இருக்கிறதாம். இதில் ஒன்றை ரஜினி ஓகே செய்ததும், டிசம்பர் முதல் வாரம் இயக்குநர் அறிவிப்பு வெளியாகும் எனவும், மார்ச்சில் ஷூட்டிங் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
News November 22, 2025
விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்: அப்பாவு

கரூர் துயரத்திற்கு பிறகு மீண்டும் விஜய் மக்களை சந்திக்கவுள்ளார். இதுகுறித்த கேள்விக்கு, விஜய் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் பிரசாரத்திற்கு செல்கிறார் என்பதை சொல்லி அவரை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் அப்பாவு கேட்டுக்கொண்டுள்ளார். சில நாள்களாக விஜய்யை திமுகவினர் கடுமையாக சாடிய நிலையில், இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


