News March 21, 2024
ஐஎஸ்ஐஎஸ் இந்தியா தலைவர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும், அசாமிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், துப்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதுங்கி இருந்த பரூக்கி, ரெஹான் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Similar News
News November 6, 2025
CM ஸ்டாலின் அறிக்கை விட்டு ஒளிந்துகொள்வார்: விஜய்

தவெக பொதுக்குழுவில் CM ஸ்டாலினை விஜய் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். மக்களுக்கு திமுக அரசு மீதான நம்பிக்கை முழுவதுமாக மண்ணில் புதைந்துவிட்டதாகவும், 2026 தேர்தலில் திமுக தலைமைக்கு அதை இன்னும் ஆழமாக புரிய வைப்பார்கள் என்றும் விஜய் கூறினார். அப்போது, பழக்க தோஷத்தில் மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்று அறிக்கை வெளியிட்டு, அறிவாலயத்திற்குள் ஸ்டாலின் ஓடி ஒளிந்துகொள்வார் என அவர் விமர்சித்துள்ளார்.
News November 6, 2025
உங்கள் உடல் உறுப்புகளுக்கு எதை பார்த்தால் பயம்?

நீங்கள் அன்றாடம் செய்யும் சில தவறுகளால் உங்கள் உள்ளுறுப்புகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதன் பாதிப்பு மெதுவாக தான் தெரியும். 35 வயதுக்கு மேல், ஒவ்வொரு பிரச்னையாக வெளியே வரும். அதுவரை காத்திருக்கப் போகிறீர்களா? உங்கள் உடல் உறுப்புகளை பாதிக்கும் விஷயங்கள் எவை என்பதை இப்போதே தெரிந்துகொண்டு, அவற்றை தவிர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள். அதற்கு மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்கள். SHARE IT
News November 6, 2025
வார விடுமுறை.. 920 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார விடுமுறை நாள்களை முன்னிட்டு 920 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை 340 பஸ்களும், நாளை மறுநாள் 350 பஸ்களும் புறப்படும். அதே போல கோயம்பேட்டில் நாளை 55 பஸ்களும், நாளை மறுநாள் 55 பஸ்களும், திருப்பூர், கோவை, ஈரோட்டில் இருந்து பல இடங்களுக்கு 100 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


