News March 21, 2024
ஐஎஸ்ஐஎஸ் இந்தியா தலைவர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும், அசாமிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், துப்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதுங்கி இருந்த பரூக்கி, ரெஹான் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Similar News
News November 9, 2025
தலைவலியா அலட்சியம் காட்டாதீங்க.. இதை பாருங்க

உங்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுதா? அலட்சியப்படுத்தாதீங்க. தலைவலி எப்போதாவது ஏற்பட்டால் பிரச்னை இல்லை. அடிக்கடி ஏற்பட்டால் ஏதேனும் உடல்நல குறைபாட்டின் வெளிப்பாடாக இருக்கலாம். ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தமும் காரணமாக இருக்கும். தலைவலியை தவிர்க்க என்ன செய்யலாம் என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News November 9, 2025
GPay, PhonePe, Paytm பணத்துக்கு சிக்கல்… உஷாரா இருங்க!

கிரெடிட் கார்டுடன் GPay, PhonePe, Paytm போன்ற UPI ஆப்களை லிங்க் செய்து, பலரும் பணம் செலுத்துகின்றனர். உங்களின் கிரெடிட் கார்டு ரூபே கார்டு என்றால் மட்டுமே ₹2,000 வரையான கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லை. ஆனால், கிரெடிட் கார்டு மூலம் UPI-யில் ₹2,000+ தொகைக்கு பணம் செலுத்தினால், கடைக்காரர்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் கடைக்காரர் உங்களிடமே இதை வசூலிப்பார். எனவே, கவனம் தேவை.
News November 8, 2025
ஆசியாவின் மகிழ்ச்சியான நகரம் எது தெரியுமா?

ஆசியாவின் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் மும்பை முதல் இடம் பிடித்துள்ளது. அதாவது, 94% மக்கள் அங்கு மகிழ்ச்சியாக வாழ்வது ஆய்வில் தெரியவந்துள்ளது. முக்கியமாக, பொழுதுபோக்கு, சமூக வாழ்க்கை, தொழில் வாய்ப்புகள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் மும்பை சிறந்து விளங்குவதாக, டைம் அவுட்டின் ‘சிட்டி லைஃப் இண்டெக்ஸ் 2025’ தெரிவித்துள்ளது. பெய்ஜிங், ஷாங்காய் ஆகிய நகரங்கள் மும்பைக்கு அடுத்த இடங்களில் உள்ளன.


