News March 21, 2024
ஐஎஸ்ஐஎஸ் இந்தியா தலைவர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும், அசாமிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், துப்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதுங்கி இருந்த பரூக்கி, ரெஹான் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Similar News
News October 30, 2025
SC தலைமை நீதிபதியாக சூரியகாந்த் நியமனம்

சுப்ரீம் கோர்ட்(SC) தலைமை நீதிபதியாக சூரியகாந்தை நியமனம் செய்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக உள்ள பி.ஆர்.கவாய், வரும் 23-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக உள்ள சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்து, கவாய், கடந்த வாரம் ஜனாதிபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
News October 30, 2025
BREAKING: CBSE பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

2025 – 2026 கல்வியாண்டுக்கான CBSE 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 17.02.2026 அன்று பொதுத்தேர்வானது தொடங்க உள்ளது.
News October 30, 2025
PAK எல்லையில் இந்திய முப்படைகள் பயிற்சி

பாகிஸ்தான் எல்லையில் இந்திய முப்படைகள் ‘திரிசூல்’ பயிற்சியை தொடங்கியுள்ளன. குஜராத் – ராஜஸ்தான் இடையே, குறிப்பாக ரான் ஆஃப் கட்ச் பகுதியில் 12 நாள்கள் தொடர்ந்து இப்பயிற்சி நடைபெற உள்ளது. குஜராத்தில் உள்ள சர்ச்சைக்குரிய சர் கிரீக் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கும் நிலையில், இந்திய ராணுவம் பயிற்சியை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


