News March 21, 2024
ஐஎஸ்ஐஎஸ் இந்தியா தலைவர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும், அசாமிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், துப்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதுங்கி இருந்த பரூக்கி, ரெஹான் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Similar News
News November 4, 2025
Drug overdose: வாரந்தோறும் 12 பேர் பலி

இந்தியாவில் வாரம் ஒன்றுக்கு சராசரியாக 12 பேர், மருந்துகளை அதிகமாக பயன்படுத்தியதால் உயிரிழந்துள்ளதாக NCRB தெரிவித்துள்ளது. 2019 முதல் 2023 வரை 3,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் ‘Overdose’ காரணமாக நிகழ்ந்துள்ளன. Opiod வலி நிவாரணிகள், பதற்றத்தை குறைக்கும் மருந்துகள் எளிதாக கிடைப்பதே இதற்கு காரணம் என்று கூறும் நிபுணர்கள், போதைப்பொருள் அதிகரிப்பின் அச்சுறுத்தலை இது சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
News November 4, 2025
Worldcup சாம்பியன் கேப்டனின் சொத்து மதிப்பு தெரியுமா?

இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. BCCI கிரேடு ஏ காண்ட்ராக்ட்டில் ஆண்டுக்கு ₹50 லட்சம், சர்வதேச போட்டிகளுக்கு ₹31 லட்சம், WPL-ல் ₹1.80 கோடி வருமானம் ஈட்டுகிறார். இதுதவிர, ஒரு நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக ₹10 – ₹12 லட்சம் வரை பெறுகிறார். ஆடம்பர பங்களா, சொகுசு வாகனங்களையும் வைத்துள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு ₹30 கோடியாகும்.
News November 4, 2025
மத்திய அரசு மீது தலைமை நீதிபதி குற்றச்சாட்டு

அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி BR கவாய் விமர்சித்துள்ளார். BR கவாய் அமர்வு விசாரித்த Tribunal Reforms Act குறித்த வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மத்திய அரசு கோரியது. வாதங்களை முழுவதும் கேட்ட பிறகு, நள்ளிரவில் சமர்ப்பித்துள்ள மத்திய அரசின் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த கவாய், அதை ஏற்க மறுத்துள்ளார்.


