News March 21, 2024

ஐஎஸ்ஐஎஸ் இந்தியா தலைவர் கைது

image

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும், அசாமிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், துப்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதுங்கி இருந்த பரூக்கி, ரெஹான் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Similar News

News November 10, 2025

5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை

image

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்காரணமாக தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

News November 10, 2025

காலையில் எழுந்ததும் இதை மட்டும் செய்யாதீங்க!

image

உணவு, வேலை என மாறி வரும் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப, நமது உடலை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில், நீங்கள் காலையில் எழுந்ததும் செய்யும் 5 விஷயங்கள் உங்கள் நாளை வெகுவாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி, டாக்டர் பிரகாஷ் மூர்த்தி, காலையில் எழுந்ததும் செய்யக்கூடாத 5 விஷயங்களை பட்டியலிட்டுள்ளார். அதை மேலே தொகுத்துள்ளோம். Swipe செய்து தெரிஞ்சுக்கோங்க.

News November 10, 2025

ஆப்கன் – பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வி

image

துருக்கியில் நடந்து வந்த ஆப்கன் – பாகிஸ்தான் இடையேயான, 3-ம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. பாகிஸ்தானின் நியாயமற்ற கோரிக்கைகள் தான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம் என ஆப்கன் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், போரில் ஈடுபடுவது தங்களது நோக்கமல்ல எனவும், ஆனால், போர் தொடங்கினால், தங்களை தற்காத்து கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்றும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!