News March 21, 2024

ஐஎஸ்ஐஎஸ் இந்தியா தலைவர் கைது

image

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும், அசாமிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், துப்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதுங்கி இருந்த பரூக்கி, ரெஹான் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து 2 பேரும் தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Similar News

News October 18, 2025

அடிக்கடி வரும் தலைவலி… கவனமா இருங்க!

image

சிலருக்கு அடிக்கடி தலைவலி வருவது உடல் பாதிப்புகளின் அறிகுறி என டாக்டர்கள் கூறுகின்றனர். ரத்த அழுத்தம், மன அழுத்தம், குடல் ஆரோக்கியம் பாதிப்பு போன்ற உடல் பாதிப்புகளால் தலைவலி வரலாம். மேலும், அடிக்கடி ஒற்றைத் தலைவலி வந்தால், மூளையில் கட்டி வரலாம் என்றும் கூறப்படுகிறது. அதே போல, அடிக்கடி தலைவலி வருபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயமும் உண்டு. தொடர் தலைவலி ஏற்பட்டால் டாக்டரை அணுகுங்கள்.

News October 18, 2025

சாதி கொலைகளில் அலட்சியம் காட்டுகிறதா திமுக அரசு?

image

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சிறப்பாக செயல்படுத்த CM ஸ்டாலின் தலைமையில் குழு உள்ளது. இக்குழு 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டும். ஆனால் 4 ஆண்டுகளில் வெறும் 3 முறையே கூடியிருக்கிறது என அண்ணாமலை பதிவிட்டிருக்கிறார். மேலும், இக்குழுவின் தலைவரான CM இதுபற்றி பேச மறுப்பது ஏன் எனவும் கேட்டுள்ளார். இதுதவிர, ஆட்சியர் தலைமையில் குழு, ADGP தலைமையில் குழு என பல குழுக்கள் செயலற்று இருப்பதாகவும் கூறியுள்ளார்.

News October 18, 2025

BREAKING: வீடு வீடாக தீபாவளி பரிசு… செந்தில் பாலாஜி

image

சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், தனது தொகுதி மக்களை கவரும் வகையில் சிறப்பு தீபாவளி பரிசுகளை செந்தில் பாலாஜி கொடுத்து வருகிறார். இந்நிலையில், கரூர் தொகுதியில் உள்ள சுமார் 88 ஆயிரம் குடும்பங்களுக்கும் தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா பரிசுகளை செந்தில் பாலாஜி வழங்கி வருகிறார். தனது ஆதரவாளர்களை ஒவ்வொரு வீடாக சென்று பரிசுகளை வழங்கவும் அறிவுறுத்தியிருக்கிறார்.

error: Content is protected !!