News October 23, 2025
ஐசக் நியூட்டனின் பொன்மொழிகள்

*நமக்குத் தெரிந்தவை ஒரு துளி அளவு, நமக்குத் தெரியாதவை ஒரு கடல் அளவு. *தீர்க்கமான அனுமானம் இல்லாமல் பெரிய கண்டுபிடிப்பு எதுவும் நிகழ்த்தப்படவில்லை. *பிழைகள் கலையில் இல்லை, கலைஞர்களில் உள்ளது. *எனது கருவிகளையும் பொருட்களையும் மற்றவர்கள் செய்துதருவார்கள் என்று காத்திருந்திருந்தால், நான் ஒருபோதும் எதையும் செய்திருக்க முடியாது. *ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமான மற்றும் எதிரான எதிர்ச்செயல் உண்டு.
Similar News
News October 23, 2025
இந்தியாவுக்கு வாழ்வா சாவா போட்டி

மகளிர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, தெ.ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு இப்போது இந்திய அணி போராடி வருகிறது. அதற்கு இன்று நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். தொடரை சிறப்பாக தொடங்கிய இந்திய கடைசி 3 போட்டிகளில் சொதப்பியது. மீண்டும் வெற்றிப்பாதைக்கு இந்தியா திரும்புமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
News October 23, 2025
வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைய இப்படி விளக்கேற்றுங்கள்!

சூரியன் மறைவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் விளக்கு ஏற்றுவது நல்லது. லட்சுமி தேவிக்காக விளக்கை வடக்கு திசையில் ஏற்றி வைக்க வேண்டும். அங்கே செருப்பு இருக்கக் கூடாது. விளக்கை நன்றாக சுத்தம் செய்து விட்டே விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கில் கரி படிந்திருந்தால், அதை மாற்ற வேண்டும். விளக்கு ஏற்றியவுடன் கதவை மூடக்கூடாது. வீட்டிற்குள் வரும் நல்ல சக்திகள் வெளியே தங்கிவிடும் என்பது ஐதீகம். SHARE IT.
News October 23, 2025
பள்ளிகளுக்கு விடுமுறையா? கலெக்டர் புதிய அறிவிப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(அக்.23) காலையில் மழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. இதனிடையே, மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் இயங்கும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.