News April 28, 2025
நேற்று வரை இலை இன்று களையா? சீறும் காளியம்மாள்!

நேற்று வரை இலையாக இருந்தவர்கள் இன்று களையாகத் தெரிகிறார்களா என சீமானிடம் காளியம்மாள் சீறியுள்ளார். நாதகவில் இருந்து விலகிய பிறகு முதல் முறையாகத் தனியார் நாளிதழுக்கு நேர்காணல் அளித்துள்ள அவர், பணம், பதவி, அந்தஸ்துக்காக நாதகவில் யாரும் சேரவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், களையென நினைத்து விளைந்த நல்ல பயிர்களைப் பிடுங்கிப் போட்டு விடக்கூடாது என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Similar News
News April 29, 2025
படுக்கையறையில் இவை வேண்டாமே…

*படுக்கையறைக்குள் செல்போன், லேப்டாப், கணினி, புத்தகங்கள், சார்ஜர், இவற்றை எப்போதும் அனுமதிக்கக் கூடாது. இதனால் உங்கள் அந்தரங்க நேரம், தூங்கும் நேரம் எல்லாமே தரமாக அமையும். *உறங்குவதற்கும், இளைப்பாறுவதற்கும் தான் படுக்கையறை. இதை உணர்ந்து செயல்பட்டாலே, படுக்கையறை பரவசமூட்டும் இடமாகும்.
News April 29, 2025
IPL BREAKING: RR அசத்தல் வெற்றி

இன்றைய ஐபிஎல் போட்டியில், 210 என்ற இமாலய இலக்கை அசால்ட்டாக எட்டியிருக்கிறது RR அணி. முதலில் பேட்டிங் செய்த GT அணி, 209 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். அதன்பின், பேட்டிங் செய்த GT அணியின் வைபவ் சூர்யவன்ஷி, 38 பந்துகளில் 101 அடித்து ருத்ரதாண்டவம் ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்து ஜெய்ஸ்வாலும் கலக்கியதால், வெறும் 15.5 ஓவர்களில் RR வெற்றி பெற்றது.
News April 29, 2025
ராணுவத்திற்கு நிதியுதவி செய்யுங்கள்: Scam Alert

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இதை பயன்படுத்தி மோசடி நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர் பதற்றம் காரணமாக இந்திய ராணுவத்திற்கு நிதி அளித்து உதவுங்கள் என வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, இதுபோன்ற தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.