News February 11, 2025
த்ரிஷா சொல்வது உண்மையா? பொய்யா!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1736289583969_1153-normal-WIFI.webp)
புதிய மோசடி ஒன்று பரவுவதை பாப் பாடகர் கான்யே வெஸ்ட் சுட்டிக் காட்டியிருந்தார். பிரபலங்கள் சம்மந்தம் இல்லாத பொருளை சோசியல் மீடியாவில் ப்ரமோட் செய்வார்கள். பின்னர், அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் கொடுப்பார்கள். இதற்கு பெரிய சன்மானம் கிடைக்கும். த்ரிஷாவும் அப்படியான உத்தியை கையில் எடுத்தாரா அல்லது <<15430809>>X பக்கம் உண்மையிலேயே ஹேக் ஆனதா<<>> என்று ரசிகர்கள் குழம்புகின்றனர்.
Similar News
News February 12, 2025
தினமும் 700 கி.மீ. பயணித்து வேலைக்கு செல்லும் பெண்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739288101748_1204-normal-WIFI.webp)
வேலைக்காக தினமும் பல கி.மீ. தூரம் வரை பயணிப்பவர்கள் உண்டு. ஆனால், ஊர் விட்டு ஊர் செல்வது போல 700 கி.மீ. பயணித்து வேலைக்கு செல்பவரை பார்த்தது உண்டா? மலேசியாவின் பெனாங் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரேச்சல் கெளர் என்பவர், தினமும் கொலாலம்பூர் வரை விமானத்தில் 700 கி.மீ. பயணித்து வேலைக்கு சென்று வருகிறார். குடும்பத்தினரை மிஸ் செய்யக்கூடாது என்பதால் இப்படி பயணிக்கிறாராம்.
News February 12, 2025
செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739295116273_1204-normal-WIFI.webp)
எடப்பாடி பழனிசாமிக்காக நடைபெற்ற அத்திக்கடவு – அவினாசி திட்ட பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் செங்கோட்டையன் மீது ஈபிஎஸ் ஆதரவாளர்களும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
News February 12, 2025
இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739293891189_1204-normal-WIFI.webp)
மனைவியுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல என்று சத்தீஸ்கர் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. அதேபோல,15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் இயற்கை மாறாக எந்த வகையில் உடலுறவு வைத்தாலும் அது பலாத்காரம் ஆகாது என்றும் நீதிபதிகள் கூறினர். சத்தீஸ்கரை சேர்ந்த பெண் ஒருவர், கணவரின் இயற்கைக்கு மாறான உடலுறவால் மரணமடைந்த வழக்கை விசாரித்த போது, இந்தக் கருத்தை ஹைகோர்ட் தெரிவித்தது.