News October 8, 2025
N.ஆனந்த் பதுங்கியிருக்கும் இடம் இதுவா? Official தகவல்

கரூர் துயரத்தை அடுத்து தவெக பொதுச்செயலாளர் N.ஆனந்தையும், நிர்மல் குமாரையும் தேடிவருகிறது போலீஸ். இவர்கள் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் விளக்கமளித்துள்ளார். புதுச்சேரியில் ஆனந்த் பதுங்கியிருக்கிறாரா என்பது பற்றி எதுவும் தெரியாது எனவும், இதுகுறித்து TN போலீஸ் தங்களை அணுகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 8, 2025
பாடகர் மர்ம மரணத்தில் டிஎஸ்பி கைது

சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங்கின் போது அசாம் பாடகர் ஜுபின் கார்க் உயிரிழந்த விவகாரத்தில், அவரின் உறவினரும், அசாம் டிஎஸ்பியுமான சந்தீபன் கார்க் கைது செய்யப்பட்டுள்ளார். ஜுபின் கார்க் ஸ்கூபா டைவிங் செய்தபோது சந்தீபன் கார்க் உடனிருந்ததாக கூறப்படுகிறது. புலனாய்வு துறையினரின் தீவிர விசாரணைக்கு பின் அவரை கைது செய்துள்ளனர். பாடகர் ஜுபின் கார்க் மர்ம மரணம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News October 8, 2025
காசாவை பற்றி ஸ்டாலினுக்கு எதற்கு கவலை? அண்ணாமலை

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் மனித உரிமை மீறலுக்கு எதிரான போராட்டத்தில் CM ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்நிலையில், கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசாவை பற்றிய கவலை எதற்கு ஸ்டாலின் அவர்களே என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சியில் மக்களை காவு கொடுத்த நீங்கள் காசாவிற்கு கருணை காட்ட சொல்வது ஆகச்சிறந்த நகைச்சுவை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
News October 8, 2025
+2 மதிப்பெண் சான்று.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

2014 – 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தனித்தேர்வர்களாக +2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் சுமார் 2 லட்சம் பேர் இன்னும் மார்க் ஷீட்டை பெற்றுக்கொள்ளவில்லை என TN அரசு தெரிவித்துள்ளது. 2026 ஜனவரி 10-ம் தேதிக்குள் மார்க் ஷீட்டை பெற்றுக்கொள்ளாவிட்டால் அவற்றை அழிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், மார்க் ஷீட்டை வாங்காதவர்கள் உடனடியாக கல்வித்துறையை அணுகி பெற்றுக்கொள்ளவும். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.