News March 4, 2025
இவரா அந்த பாலியல் குற்றவாளி?

மகாராஷ்டிராவில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரக்ஷாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, சிவசேனா கட்சி (ஷிண்டே) நிர்வாகி பியூஷ் எனத் தெரியவந்துள்ளது. இவரது தலைமையிலான குழுவே, அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. பியூஷ் முன்னதாக பாஜக நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இந்த விவகாரத்தில் மொத்தம் 7 பேர் மீது போக்சோ பாய்ந்துள்ளது.
Similar News
News March 4, 2025
Whatsappல் வந்த கிஸ் Emoji… மனைவியை கொன்ற கணவன்!

கேரளாவில் பைஜூ(28) வைஷ்ணவி(27) தம்பதியின் எதிர்வீட்டில் வசித்து வந்தவர் விஷ்ணு(30). வைஷ்ணவியின் Whatsappக்கு விஷ்ணுவிடமிருந்து கிஸ் எமோஜி வந்துள்ளது. இதனால், கோபமடைந்த பைஜூ இது குறித்து கேட்க, பயத்தில் வைஷ்ணவி விஷ்ணு வீட்டுக்கு ஓடியுள்ளார். ஆத்திரமடைந்த, பைஜூ கத்தியால் வைஷ்ணவியை குத்திவிட்டு, விஷ்ணுவையும் கொலை செய்துள்ளார். இருவரும் உயிரிழந்து விட, பைஜூ கைது செய்யப்பட்டுள்ளார்.
News March 4, 2025
தமிழிசைக்கு பதிலடி கொடுத்த CM ஸ்டாலின்

பிறந்தநாளுக்கு மும்மொழிகளில் வாழ்த்து தெரிவித்த தமிழிசைக்கு, தனக்கு தெலுங்கு தெரியாது எனக் கூறி CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தெலங்கானா ஆளுநராக பணியாற்றிய அனுபவத்தில் தெலுங்கு மொழியை தமிழிசை அறிந்திருப்பதாக கூறிய அவர், இதிலிருந்தே 3ஆவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டிய அவசியமில்லை, தேவைப்பட்டால் அதனை புரிந்துகொண்டு பயன்படுத்தலாம் என்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
News March 4, 2025
பிரபல கிரிக்கெட் வீரர் பத்மகர் ஷிவல்கர் காலமானார்

மும்பை அணியின் Ex கிரிக்கெட் வீரர் பத்மகர் ஷிவல்கர் (84) உடல்நலக்குறைவால் காலமானார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், 20 ஆண்டுகள் மும்பை அணிக்காக விளையாடியவர். குறிப்பாக 1972இல் தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணி பட்டம் வெல்ல உதவியவர். மும்பை கிரிக்கெட் ஒரு உண்மையான ஜாம்பவானை இழந்துவிட்டது என MCC தலைவர் அஜிங்க்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.