News March 19, 2025
4 பேர் தற்கொலைக்கு இதுதான் காரணமா?

சென்னையை சேர்ந்த டாக்டர் பாலமுருகன், தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. வட்டிக்கு கடன் வாங்கிய பாலமுருகனிடம், ஒரே நாளில் ரூ.1 கோடி தர வேண்டும் என கந்துவட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளனர். ஆனால், ஒருநாளில் ரூ.1 கோடி திரட்ட முடியாததால், பயத்தில் குடும்பத்துடன் அவர் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Similar News
News September 20, 2025
விஜய் சொல்லும் புது கணக்கு

நாகையில் பேசிய விஜய், தான் பேசுவதற்கு பல தடைகளை திமுக அரசு ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார். அப்போது அவர், 5 நிமிடம் தான் பேச வேண்டும், 10 நிமிடம் தான் பேச வேண்டும் எனக் கட்டுப்பாடு. நான் பேசுவதே 3 நிமிடம் தான் என்று சொன்னார். இதை குறிப்பிட்டு நெட்டிசன்கள், பேசுவதே 3 நிமிடம் தான் எனில், எதற்காக விஜய் இதை குறையாக சொல்கிறார் என்று கேட்கின்றனர். நீங்களே ஒரு தீர்ப்பை சொல்லுங்க.
News September 20, 2025
ரோபோ சங்கர் வீட்டில் சோகம் தொடர்கிறது

உடல்நலக் குறைவால் உயிரிழந்த காமெடி நடிகர் ரோபோ சங்கரின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதில் பெரும் கொடுமை என்னவென்றால், அவரது பேரனுக்கு இன்று மதுரையில் காதணி விழா நடக்க இருந்ததுதான். தடபுடலாய் இன்று நடந்திருக்க வேண்டிய விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுப நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டிய ரோபோ சங்கர் வீட்டில் சோகம் தற்போது வரை தொடர்கிறது. SO SAD.
News September 20, 2025
H1B விசா: இருமடங்கு அதிகரித்த விமான கட்டணம்

H1B விசா கட்டண உயர்வு நாளை அமலாகும் நிலையில், அதை விமான நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளன. வழக்கமாக டெல்லியில் இருந்து US செல்ல விமான கட்டணம் ₹37,000 வசூலிக்கப்படும். இது தற்போது 2 மடங்கு அதிகரித்து ₹80,000 ஆக உயர்ந்துள்ளது. டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட 2 மணி நேரத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் துர்கா பூஜை கொண்டாட, இந்தியா வந்த பலரும் அவசரமாக US புறப்பட்டுள்ளனர்.