News April 21, 2025
பிடிஆர்-க்கே இந்த நிலையா? அவரே சொன்ன பதில்

கடலூரில் டைட்டல் பார்க் அமைக்க அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன், பேரவையில் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பிடிஆர், தனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. நிதியை அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதைக் கேட்டால் கிடைக்கும் எனத் தெரிவித்தார். பிடிஆர் நிதியமைச்சராக இருந்தபோது, சரியாக நிதி ஒதுக்கவில்லை என பலர் புலம்பினர். தற்போது PTR-க்கும் அதே நிலை வந்திருக்கிறது.
Similar News
News November 8, 2025
பெரியார், அண்ணா போல பணியாற்றும் உதயநிதி: CM

இளைஞர்களை கட்சிக்குள் ஈர்த்து, பாசறைகளை நடத்தி, அவர்களை பேச்சாளர்களாகவும் ஆய்வாளர்களாகவும் உருவாக்கி இருக்கிறார் DCM உதயநிதி என திமுக நடத்தும் அறிவு திருவிழாவில், ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுதான் பெரியார், அண்ணா செய்த பணி என குறிப்பிட்ட அவர், ஒரு தந்தை என்பதைவிட, இயக்கத்தின் முதன்மை தொண்டனாக உதயநிதியின் செயல்பாட்டில் பெரும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
பிரபல தமிழ் நடிகர் கவலைக்கிடம்

பிரபல இயக்குநரும், நடிகருமான <<18174237>>V.சேகர்<<>> உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் காயமடைந்த அவர் ஒருவார காலமாக சென்னை போரூர் ராமச்சந்திரா ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். V.சேகர் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்வதாக FEFSI சார்பில் RK செல்வமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். கோலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் ஹாஸ்பிடலில் V.சேகரை நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
News November 8, 2025
4,000 ஆண்டுகளாக எரியும் தீ; அணையாத மர்மம்

புயல், மழை, பனி, சூறைக்காற்று என எதற்கும் அணையாத தீயை பார்த்ததுண்டா?அசர்பைஜானில் 4000 ஆண்டுகளாக ’யனார் தாக்’ என்ற மலை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. நிலத்தடியில் இருக்கும் இயற்கை எரிவாயு கசிவதால் இந்த அதிசயம் நிகழ்கிறது என்கின்றனர். ஒரு காலத்தில் இதுபோன்ற மலைகள் அந்நாட்டில் அதிகமான இருந்தன. காலப்போக்கில் எரிவாயு எடுக்கும் பணிகள் தொடங்கியதால் தற்போது இந்த ஒரு மலைதான் தப்பியுள்ளது.


