News April 21, 2025
பிடிஆர்-க்கே இந்த நிலையா? அவரே சொன்ன பதில்

கடலூரில் டைட்டல் பார்க் அமைக்க அதிமுக எம்எல்ஏ பொன் ஜெயசீலன், பேரவையில் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பிடிஆர், தனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. நிதியை அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதைக் கேட்டால் கிடைக்கும் எனத் தெரிவித்தார். பிடிஆர் நிதியமைச்சராக இருந்தபோது, சரியாக நிதி ஒதுக்கவில்லை என பலர் புலம்பினர். தற்போது PTR-க்கும் அதே நிலை வந்திருக்கிறது.
Similar News
News October 18, 2025
மீனவர்கள் கைது: இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டம்

தமிழகம், புதுவை மீனவர்கள் கைதை கண்டித்து, வரும் 27-ம் தேதி சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர், இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த ஆண்டு மட்டுமே 180 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 30 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
News October 18, 2025
கவர்னருக்கு எதிரான மனு: கோர்ட் சொன்னது என்ன?

<<18013359>>கவர்னருக்கு<<>> எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே கவர்னரின் அதிகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு குறித்து ஜனாதிபதி எழுப்பினார். அந்த வழக்கில் வரும் 21-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும், அதையடுத்து தமிழக அரசின் மனுவை விசாரிக்கலாம் என்றும் கூறி விசாரணையை CJI கவாய் ஒத்திவைத்தார்.
News October 18, 2025
வெண்ணிலவாய் பளபளக்கும் வாணி போஜன்

சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் மின்னி வருகிறார் நடிகை வாணி போஜன். இன்ஸ்டாவில் படு ஆக்டிவாக இருக்கும் அவர், தனது தீபாவளி ஸ்பெஷல் போட்டோஷூட்டை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். வெண்ணிற உடையில் மின்மினியாய் மின்னும் அவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸை அள்ளி தெளித்து வருகின்றனர். சீரியலில் நடித்த போதே சின்னத்திரை நயன்தாரா என வர்ணிக்கப்பட்ட அவரது புகைப்படங்களை மேலே Swipe செய்து பாருங்க.