News July 29, 2024
இது தமிழ்நாடா கொலை நாடா?: பிரேமலதா

அடுத்தடுத்து 4 படுகொலைகள் நடந்துள்ளதாக கூறி, இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகிவிட்டதாகவும், டாஸ்மாக், கஞ்சா போதை வஸ்துக்கள் பயன்பாடு அதிகரித்திருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கி, கொலை நாடாக மாறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News August 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 429 ▶குறள்: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். ▶ பொருள்: வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.
News August 16, 2025
திமுக கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்

தூய்மை பணியாளர்களை வைத்து அரசியல் செய்வது அற்பமானது என திருமா விமர்சித்துள்ளார். அவர்களுக்கு நீதி கிடைப்பதை விட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரது நோக்கமாக இருப்பதாக கூறினார். சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் 11- யை தனியாருக்கு கொடுத்தது கடந்த அதிமுக ஆட்சியில் என்றும், அதற்கு அவர்களிடம் என்ன பதிலுள்ளது என கேட்டார். தற்போது 2 மண்டலங்களை தனியாருக்கு விட்ட திமுக அதனை திரும்பபெற கோரிக்கை விடுத்தார்.
News August 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 16 – ஆடி 31 ▶ கிழமை: சனி ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: அஷ்டமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை.