News March 28, 2025
பெண்கள் ‘BRA’வில் இப்படி ஒரு பிரச்னையா?

நவீன வாழ்க்கை முறையில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்திலும் பிரச்னை உள்ளது. இதில் பெண்கள் அணியும் ‘பிரா’வும் விதிவிலக்கல்ல. அண்மை ஆய்வில் சுமார் 64% பிராக்களில், ஆபத்தான கெமிக்கல்கள் இருந்துள்ளன. பிரா உடலுடன் ஒட்டி இருப்பதால், அதிலுள்ள கெமிக்கல்கள் சருமத்துக்குள் எளிதாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கின்றன. இந்த நச்சுகள் நீண்டகாலம் உடலில் தங்கி கேன்சர் உள்ளிட்ட பல நோய்களுக்கு காரணமாகின்றனவாம்.
Similar News
News March 31, 2025
தொடர் மின்தடை.. டெல்லி பாஜக அரசு மீது AAP தாக்கு

டெல்லியில் பாஜக அரசு அமைந்தது முதல் மின்தடை அதிகரித்து விட்டதாக AAP விமர்சித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய AAP மூத்தத் தலைவர் அதிஷி, ஆம் ஆத்மி ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் இன்வர்டெர், ஜெனரேட்டர் தேவை குறைந்து இருந்ததாகவும், ஆனால் தற்போது மீண்டும் அதன் தேவை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினார். டெல்லியை ஆட்சி செய்ய பாஜகவுக்கு தெரியவில்லை, அதற்கான தகுதி அக்கட்சியிடம் இல்லை எனவும் விமர்சித்தார்.
News March 31, 2025
4.8 காேடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் ஐ.டி.

நாடு முழுவதும் இதுவரை 4.8 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் ஐ.டி. வழங்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளுடன் சேர்ந்து டிஜிட்டல் ஐ.டி. வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த ஐ.டி.யில் விவசாயிகளிடம் இருக்கும் நிலம், பயிரிடப்பட்ட பயிர் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். உ.பி.யில் அதிகபட்சமாக 1.2 கோடி விவசாயிகளுக்கு ஐ.டி. வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 25 லட்சம் பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
News March 31, 2025
அது வேண்டாமே… பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்!

கேரளா, குஜராத், அந்தமான் நிகோபார் தீவுகளின் கடற்கரையில் கடல்சார் சுரங்கம் அமைக்கும் டெண்டர்களை ரத்து செய்யுமாறு PM மோடிக்கு ராகுல் கடிதம் எழுதியுள்ளார். அதில், கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் முடிவை கடுமையாக கண்டித்து இந்த கடிதத்தை எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மீனவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.